ட்ரோன் திருடன் என நினைத்து.. தலித் இளைஞரை அடித்துக் கொன்ற கும்பல்! உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில், ட்ரோன் திருடன் என்று நினைத்து தலித் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரப் பிரதேசம் ரேபரேலியில் ட்ரோன் திருட்டு தொடர்பாக அச்சம் அதிகரித்துள்ளது. அதாவது ட்ரோன்களை கொண்டு கண்காணிக்கப்பட்டு, பின்னர் ஆள் இல்லாத வீடுகளில் திருட்டு நடப்பதாக பேச்சுக்கள் அடிப்பட்டிருக்கின்றன. இது வெறும் கற்பனை கதைதான், அப்படியான திருட்டுக்கள் எதுவும் இதுவரை நடக்கவில்லை என்று காவல்துறையினர் சொன்னாலும், மக்களிடையே அச்சம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று ஃபதேபூரைச் சேர்ந்த ஹரிஓம் எனும் இளைஞரை, ட்ரோன் திருடன் என்று கூறி உள்ளூர் மக்கள் சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இதில் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். ஹரியோம் மனநலம் பாதிக்கப்பட்டவர். தண்டேபூர் ஜமுனாபூரில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது, அவரைச் சூழ்ந்து கொண்ட கும்பல், ட்ரோன் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர் என்று குற்றம் சாட்டி சரமாரியாக தாக்கியுள்ளது.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஷமா முகமது, இந்த கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டவர்கள் உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார். தாக்குதலுக்கு ஆளான ஹரிஓம் ராகுல் காந்தி என்று மீண்டும் மீண்டும் கூறியிருக்கிறார். ஆனால், அவரை சூழ்ந்துக்கொண்ட கும்பல் கடுமையாக தாக்கியிருக்கிறது. இந்த தாக்குதல் வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், "ஹரிஓம்-ஐ டிரோன் திருடன் என்று தவறாக நினைத்து அடித்து கொன்றிருக்கிறார்கள். தாக்குதல் நடந்த ஏரியா மிகவும் பதற்றமான பகுதியாகும். தாக்குதல் நடத்துவதற்கு முன்தினம் இரவு, இரண்டு நபர்கள் அனுமதியின்றி ட்ரோனை இயக்கியிருந்தனர். இதனால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்தனர். மரப்பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தும் இருவர், விளையாட்டுக்காக ட்ரோனை இயக்கி பார்த்திருந்தார்கள்.
ட்ரோன் காரணமாக மக்கள் அச்சமடைந்திருந்தாலும், எந்த பொருட்களும் திருடு போனதாக புகார்கள் எதுவும் வரவில்லை. இப்படி இருக்கையில்தான் அடுத்த நாள் ஹரிஓம் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். சம்பவம் தொடர்பாக நாங்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்" என்று கூறியிருக்கின்றனர்.
ரேபரேலியில் மட்டுமல்லாது மதௌகர் மற்றும் ராம்பூராவிலும் இதேபோன்று ட்ரோன் திருடர்கள் பற்றிய அச்சம் இருக்கிறது. இந்த பகுதியில் வியாபாரத்திற்காக செல்பவர்கள் மீது உள்ளூர் மக்கள் சிலர் தாக்குதலை நடத்துகின்றனர். குறிப்பாக பாத்திரங்களை விற்பவர்கள், போர்வைகளை விற்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். தொடர் சம்பவங்களையடுத்து பொதுமக்களிடம் காவல்துறை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. வதந்திகளை பரப்புவது, வியாபாரிகள் மீது கும்பல் தாக்குதலை நடத்துவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் கூறியிருக்கின்றனர்.
இருப்பினும், கிராமப்புறங்களில் மக்களிடையே அச்சம் குறையவில்லை. எட்டாவாவில் மக்கள் இரவு முழுவதும் மாறி மாறி விழித்திருக்கின்றன. தியோரியாவில், குழந்தைகள் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். பல்லியாவில், விவசாயிகள் தங்கள் வானத்தில் ஹெட் லைட்டுகளை இரவு முழுவதும் ஆன் செய்து வைத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
வன்னியர் மட்டும் வாழக் கூடாதா? காங்கிரஸ் கட்சிக்குள் வெடித்த மோதல்! சீனியர் தலை போட்ட பரபர மீட்டிங்! -
கேரளா தலையெழுத்தை தீர்மானிக்கும் "அந்த" சில ஆயிரம் வாக்குகள்.. கரையேறுமா காங்கிரஸ்? -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்?












Click it and Unblock the Notifications