பேச்சுரிமை என்பது பிரதமர் மோடியை இழிவாக விமர்சிப்பதற்கு அல்ல.. அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபர கருத்து
லக்னோ: பேச்சுரிமை என்பது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பிறரை இழிவுப்படுத்தும் வகையில் விமர்சிப்பது அல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் மும்தாஜ் மன்சூரி. இவர் சமூக வலைதளங்களை அதிகமான பயன்படுத்தி வருகிறார். மேலும் குறிப்பிட்ட விஷயங்களில் தனது கருத்துகளை பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.
இந்நிலையில் தான் கடந்த 2020ல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் செய்தார். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு
மேலும் மும்தாஜ் மன்சூரிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீர்காஞ்ச் போலீசார் இந்திய தண்டனைசட்டம் 504 (வேண்டுமமென்றே ஒருவரை அவமதிப்பு செய்து அமைதியை சீர்குலைத்தல்) மற்றும் ஐடி சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மும்தாஜ் மன்சூரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதிகள் அஸ்வினி குமார், ராஜேந்திர குமார் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

பேச்சுரிமை அல்ல
மேலும் இந்த விசாரணையின்போது நீதிபதிகள் மும்தாஜ் மன்சூரியின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது‛‛இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் பேச்சுரிமை வழங்குகிறது. இதன்மூலம் பிறரை இழிவாகவும், வசைபாடுவது என்பது ஏற்புடையது அல்ல. எந்த காரணத்தை கொண்டும் இதனை ஏற்க முடியாது. பிரதமர், அமைச்சர்களை திட்டி பேசுவது என்பது பேச்சுரிமையின் கீழ் வராது.

சட்ட நடவடிக்கையை தொடர..
எனவே எப்ஐஆரின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் சட்ட நடவடிக்கையை தொடர போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் எப்ஐஆரை ரத்து செய்யக்கோரிய மனுதாரரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இந்த வழக்கை போலீசார் விரைந்து முடிக்க வேண்டும்'' என நீதிபதிகள் கூறினர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications