Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பேச்சுரிமை என்பது பிரதமர் மோடியை இழிவாக விமர்சிப்பதற்கு அல்ல.. அலகாபாத் உயர்நீதிமன்றம் பரபர கருத்து

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பேச்சுரிமை என்பது பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பிறரை இழிவுப்படுத்தும் வகையில் விமர்சிப்பது அல்ல என அலகாபாத் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் ஜான்பூரை சேர்ந்தவர் மும்தாஜ் மன்சூரி. இவர் சமூக வலைதளங்களை அதிகமான பயன்படுத்தி வருகிறார். மேலும் குறிப்பிட்ட விஷயங்களில் தனது கருத்துகளை பற்றி அவர் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்திருந்தார்.

இந்நிலையில் தான் கடந்த 2020ல் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்பட பாஜக தலைவர்கள் குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சனம் செய்தார். இதற்கு சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்குப்பதிவு

வழக்குப்பதிவு

மேலும் மும்தாஜ் மன்சூரிக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் மீர்காஞ்ச் போலீசார் இந்திய தண்டனைசட்டம் 504 (வேண்டுமமென்றே ஒருவரை அவமதிப்பு செய்து அமைதியை சீர்குலைத்தல்) மற்றும் ஐடி சட்டப் பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

உயர்நீதிமன்றத்தில் வழக்கு

இந்நிலையில் தன் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என மும்தாஜ் மன்சூரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். நீதிபதிகள் அஸ்வினி குமார், ராஜேந்திர குமார் ஆகியோரின் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய மறுத்துவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

பேச்சுரிமை அல்ல

பேச்சுரிமை அல்ல

மேலும் இந்த விசாரணையின்போது நீதிபதிகள் மும்தாஜ் மன்சூரியின் செயலுக்கு கடும் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதொடர்பாக நீதிபதிகள் கூறும்போது‛‛இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது அனைத்து மக்களுக்கும் பேச்சுரிமை வழங்குகிறது. இதன்மூலம் பிறரை இழிவாகவும், வசைபாடுவது என்பது ஏற்புடையது அல்ல. எந்த காரணத்தை கொண்டும் இதனை ஏற்க முடியாது. பிரதமர், அமைச்சர்களை திட்டி பேசுவது என்பது பேச்சுரிமையின் கீழ் வராது.

சட்ட நடவடிக்கையை தொடர..

சட்ட நடவடிக்கையை தொடர..

எனவே எப்ஐஆரின்படி குற்றத்திற்கான முகாந்திரம் இருப்பதால் சட்ட நடவடிக்கையை தொடர போலீசாருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் எப்ஐஆரை ரத்து செய்யக்கோரிய மனுதாரரின் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. இந்த வழக்கை போலீசார் விரைந்து முடிக்க வேண்டும்'' என நீதிபதிகள் கூறினர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+