பட்டப்பகலில் செக்ஸ் டார்ச்சர்.. உபியில் ஹிஜாப் அணிந்த பெண் மீது கொடூர தாக்குதல் - ஆட்டோவில் கடத்தல்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஹிஜாப் அணிந்து சென்ற பெண்ணை ஆண் ஒருவர் பொது இடத்தில் வைத்து கொடூரமாக தாக்கும் பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது தற்போது வெளியாகி இருக்கும் சிசிடிவி காட்சிகள். ரேபரேலியில் சாலையோரம் நடந்து செல்லும் ஹிஜாப் அணிந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபர், அவரை கொடூரமாக தாக்கும் காட்சிதான் அந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.

தாக்கப்பட்ட பெண்ணுக்கு பின்னால் நடந்து சென்ற ஆண் ஒருவர், ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு அருகே சென்று அவரது தோள் மீது கைபோட்டு தகாத முறையில் நடக்க முயற்சிக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் அங்கிருந்து தப்பிச்செல்ல முயல்கிறார். உடனே பெண்ணின் கையை பிடித்து வலுக்கட்டாயமாக அந்த ஆண் இழுத்தார்.
கையை உதறிவிட்டு பெண் செல்ல முயன்றபோது, ஆத்திரமடைந்த ஆண் அவரை ஓங்கி அடிக்கும் காட்சி பதிவாகி உள்ளது. அதன் பிறகு அந்த பெண் உடன்பட மறுத்த நிலையில் சாலை ஓரத்திலேயே தள்ளுமுள்ளுவில் ஈடுபடுகிறார் அந்த நபர். சில வினாடிகள் கழித்து அந்த பெண்ணை அருகே உள்ள கடைக்குள் தள்ளுகிறார்.

தொடர்ந்து அவரது இணங்க மறுத்த பெண்ணை மீண்டும் தாக்குவதுபோல் கை ஓங்கி மிரட்டுகிறார். அதன் பின் தன்னுடைய செல்போனை எடுத்து யாரிடமோ அவர் பேசுகிறார். உடனே அங்கு ஒரு ஆட்டோ வந்து அவர் அருகிலேயே நிற்கிறது. அதற்குல் பெண்ணை இழுத்துச் சென்று வலுக்கட்டாயமாக ஏற்றி கடத்தி சென்றார் அந்த நபர்.
அங்கிருந்த கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 20 ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக அந்த சிசிடிவி காட்சியில் காட்டுகிறது. லக்னோ - அகமதாபாத் தேசிய நெடுஞ்சாலை ஓரம் இந்த சம்பவம் நடந்து இருக்கிறது.

ஆட்டோவில் கடந்தி செல்லப்பட்ட பெண்ணை ஒரு அறைக்கு அந்த நபர் அழைத்து சென்றதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து ரேபரேலி போலீஸ் அளித்து உள்ள விளக்கத்தில் ஹர்சந்த்பூர் போலீஸ் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறது.
உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி பகுதியில் அப்பாவி பெண்களை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது அண்மை காலங்களில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த வாரம் ஹர்சந்த்பூரை அடுத்த திதோலி கிராமத்தில் உள்ள ஒரு விடுதியில் 3 பெண்கள், 2 ஆண்கள் உட்பட பாலியல் தொழிலில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications