டாக்டரிடம் ஐபோன் திருடிய நபர்.. அடுத்த ஒரு மணிநேரத்தில் ட்விஸ்ட்.. சிக்கியது எப்படி? சுவாரசிய தகவல்
கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நோயாளி போல் நடித்து டாக்டரிடம் இருந்து ஐபோனை திருடிய நபரை போலீசார் அடுத்த ஒரு மணிநேரத்தில் அதிரடியாக கைது செய்தனர். இந்த திருடன் எப்படி சிக்கினான்? என்பது பற்றிய சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் தனியாருக்கு சொந்தமான மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனைக்கு ஒரு நபர் வந்தார். சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்திருந்தார். அவர் தனது காலில் அடிபட்டுள்ளதாக கூறினார். நொண்டிநொண்டி நடந்து சென்றார்.

அந்த நபரால் சரியாக நடக்க முடியவில்லை. இடது கையில் வாக்கிங் ஸ்டிக் வைத்திருந்தார். மருத்துவரின் மருந்து சீட்டுடன் நடந்து சென் று கொண்டிருந்தார். அப்போது மருத்துவமனை ஊழியர்களிடம் உதவி கோரினார். இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் அவருக்கு உதவி செய்தனர்.
இந்த வேளையில் மருத்துவமனையில் ஜூனியராக பணியாற்றும் டாக்டர் அணிந்திருந்த கோட்டில் இருந்து அந்த நபர் ஐபோனை திருடிவிட்டு சென்றார். அதனை டாக்டர் உணரவில்லை. அந்த நபர் மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற சமயத்தில் தான் டாக்டர் தனது ஐபோன் திருடப்பட்டு இருப்பதை உணர்ந்தார். உடனடியாக அவர் தனது எண்ணை தொடர்பு கொள்ள முயன்றார். அது ஸ்விட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.
அப்போது தான் நோயாளியாக இருந்த நபர் திருடி இருக்கலாம் என்று அவர் சந்தேகித்தார். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அப்போது உதவி செய்தபோது அந்த நபர் நைசாக கோட்டில் இருந்த ஐபோனை திருடியது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அவர் போலீசில் புகார் தெரிவித்தார். அடுத்த 60 நிமிடத்தில் அந்த நபர் போலீசாரிடம் சிக்கினார்.
அவரிடம் இருந்த ஐபோன் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் முகமது ஃபைஸ் என்பதும், நோயாளி போல் நடித்து டாக்டரிடம் ஐபோன் திருடியதும் தெரியவந்தது. மேலும் பல இடங்களில் அவர் மக்களின் கவனத்தை திசை திருப்பி செல்போன் உள்பட பலவற்றை திருடியது தெரியவந்தது.
இதுபற்றி துணை போலீஸ் கமிஷனர் ஷ்ரவன் குமார் கூறுகையில், ‛‛ஐபோன் திருடியவரை போலீசார் விரைவாக கைது செய்துள்ளனர். அவரை கைது செய்த போலீஸ் டீமை நான் பாராட்டுகிறேன் இந்த கைது நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி தான் காரணம். சிசிடிவியால் தான் திருட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர்'' என்றார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications