''உ.பி.யில் தோற்றால்.. நாடு முழுக்க பாஜக வீழ்ச்சியடையும், காணாமல் போகும்'' மம்தா பிரச்சாரம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக நீக்கப்பட்டால், இந்தியாவில் பாஜக என்ற கட்சியே இருக்காது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளன. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மாா்ச் 7-ஆம் தேதி வரை 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. பாஜகவை ஆதரித்து பிரதமர் மோடி டிஜிட்டல் பிரசாரத்தை மேற்கொண்டார். உத்தரப்பிரதேச எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சியை ஆதிரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று பிரசாரம் செய்து வருகிறார்.

சமாஜ்வாதி
உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக நேற்று மாலை அவர் மேற்கு வங்கத்தில் இருந்து லக்னோ புறப்பட்டு சென்றார். அகிலேஷ் யாதவ் அழைப்பின் பேரில், பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சமாஜ்வாதி கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய லக்னோவிற்கு செல்வதாக மம்தா குறிப்பிட்டார்.

மம்தா பானர்ஜி
அடுத்த நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்துக் கட்சிகளையும் ஒருங்கிணைத்து, தேசிய தலைவராக வேண்டும் என்ற நோக்கத்துடன் மம்தா செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு நடந்த மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜகவின் கடும் போட்டிக்கு நடுவே மூன்றாவது முறையாக மம்தா வெற்றி பெற்று சாதனை படைத்தார். அதை தேசிய அளவில் கொண்டு செல்ல மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

உத்தரப்பிரதேசம்
உத்தரப்பிரதேசம் இந்தியாவிலேயே பெரிய மாநிலம், 403 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம். இங்கு வெற்றி பெறும் கட்சி தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் இங்கு வெற்றி பெற அனைத்து கட்சிகளும் மோதிக்கொள்ளும். இந்நிலையில், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் அழைப்பின்பேரில் உத்தரப்பிரதேசத்தில், சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரத்தை மேற்கொண்டார் மம்தா பானர்ஜி.

பிரசாரம்
இன்று நடந்த பிரசாரத்தில் மம்தா பேசும்போது, ''பாஜகவை தோ்தலில் தோற்கடிக்க வேண்டும். அகிலேஷ் யாதவ் வெல்ல வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் விரும்புகிறது. பாஜகவுக்கு எதிரான எங்கள் போராட்டம் வெல்ல அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் தேவை. பாஜகவை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உத்தர பிரதேசத்தில் எங்கள் கட்சி போட்டியிடவில்லை. நான் வாராணசிக்கும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறேன்.

பாஜக
பாஜகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி விடாதீர்கள். உத்தரப்பிரதேசத்தில் இருந்து பாஜக நீக்கப்பட்டால், இந்தியாவில் பாஜக என்ற கட்சியே இருக்காது'' என்று அனல் பறக்க சமாஜ்வாதிக்காக பிரசாரத்தை மேற்கொண்டிருக்கிறார் மம்தா. தொடர்ந்து பாஜகவுக்கு எதிராக எல்லா இடங்களிலும் பேசி வரும் மம்தா, அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கான பயிற்சிக்களமாக உத்தரப்பிரதேச தேர்தலை உற்றுநோக்கி வருகிறார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications