‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பல்கலைக்கழகம் ஒன்றில் ஜெய்ஸ்ரீராம், விராட் கோலி என எழுதிய மாணவர்களை ஆசிரியர் பாஸ் செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தின் ஜான்பூரில், வீர் பகதூர் சிங் பூர்வாஞ்சல் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பி பார்மா துறையில் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, தகுதியில்லாத மாணவர்கள் தேர்ச்சி பெற வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விவகாரம் குறித்து துணைவேந்தரிடம் புகார் மனுவை கொடுத்திருக்கிறார். ஆனால், புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விசாரணை நடத்துவதாகவும், தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுப்பதாகவும் துணைவேந்தர் கூறியிருக்கிறார். ஆனால், அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனையடுத்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பி பார்மா துறையில் முதலாமாண்டில் தேர்வான சில மாணவர்களின் வினாத்தாளின் நகலை திவ்யான்ஷு சிங் கேட்டிருந்தார். இந்த நகல்கள் இன்று கிடைக்க பெற்றிருக்கின்றன. இதில் பல தேர்தவான பல மாணவர்கள் சரியான விடையை எழுதாதது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.
மட்டுமல்லாது ஜெய்ஸ்ரீராம் என்றும், விராட் கோலி, ரோஹித் எனவும் அந்த மாணவர்கள் விடைகளை எழுதியுள்ளனர். சரியாக சொல்வதெனில் ஜெய்ஸ்ரீராம், ஜெய் ஹனுமான், விராட் கோலி, ரோஹித் வார்த்தைகளை மட்டும் வைத்தே மாணவர்கள் விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். இந்த விடைத்தாள் நகல்களை வேறு பேராசிரியர்களிடம் கொடுத்து திருத்தச் சொன்னபோது அவர்கள், அனைத்து விடைத்தாள்களுக்கும் '0' மதிப்பெண்ணை வழங்கியுள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் விவாதங்களை கிளப்பிய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வந்தனா கூறியுள்ளார். பின்னர் தேர்வு குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதில், டாக்டர் வினய் வர்மா மற்றும் டாக்டர் ஆஷிஷ் குப்தா என இரண்டு ஒப்பந்த ஆசிரியர்கள் பணம் வாங்கிக்கொண்டு மாணவர்களை பாஸ் செய்ய வைத்திருக்கிறார்கள் என தெரிய வந்திருப்பதாகவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் துணை வேந்தர் கூறியுள்ளார்.
இருப்பினும் இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணை வேந்தருக்கும் தொடர்பு இருக்கிறது, எனவே அவர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஜெய்ஸ்ரீராம், ஜெய் அனுமான் என எழுதியதால் பல்கலைக்கழக மாணவர்கள் பாஸ் செய்யப்பட வைக்கப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications