சனாதன தர்ம கொள்கையை மீட்டெடுக்கணும்! கேரள கவர்னர் ஆரீப் கான் வலியுறுத்தல்
லக்னோ: ‛‛இந்தியாவில் ‛சனாதான தர்ம கொள்கையை' மீட்டெடுக்க வேண்டும்'' என கேரள ஆளுநர் ஆரீப் முகமது கான் கூறினார்.
கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியின் ஆட்சி நடக்கிறது. பினராயி விஜயன் முதல்வராக உள்ளார். கேரள மாநில ஆளுநராக ஆரீப் முகமது கான் செயல்பட்டு வருகிறார்.

இவர் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் கலான் நகரில் தனியார் பள்ளி ஒன்றை ஆரீப் முகமது கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசினார். அப்போது, இந்தியாவில் முறையான கல்வியை பரப்பி பழைய கலாச்சாரம் மற்றும் 'சனாதன தர்ம' கொள்கைகளை மீட்டெடுக்க வேண்டும் என கூறினார். இதுபற்றி ஆரீப் முகமது கான் பேசியதாவது:
"நாட்டில் பழைய கலாச்சாரத்தை மீட்டெடுக்க அனைவரும் பாடுபட வேண்டும். நாம் அங்கு திரும்பி செல்ல வேண்டும் என்பதற்காக அல்ல. இந்தியாவில் 'சனாதன' கொள்கைகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக தான். இதை செய்வது என்பது கல்வி இல்லாமல் சாத்தியமில்லை. இதனால் முறையான கல்வியை வழங்க வேண்டும்.
மேலும், மனித வாழ்வின் நோக்கம் என்பது அறிவை தேடுவது தான் என சுவாமி விவேகானந்தர் கூறியுள்ளார். இதனால் அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். மேலும் பணிவு என்பது அறிவை பொறுத்ததாகவே இருக்கும். இதனால் பணிவு குணம் கொண்டவர்களை இழிவாக பார்க்க முடியாது'' என்றார்.












Click it and Unblock the Notifications