உபியில் கார் ஏற்றி விவசாயிகள் கொலை: ஓராண்டு ஆகியும் நீதி கிடைக்கவில்லை.. ராகேஷ் திகாய்த் வேதனை
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிபூரில் கார் ஏற்றி 4 விவசாயிகள் கொல்லப்பட்டு ஓராண்டுகள் நிறைவடைந்தும் இன்னும் இதில் நீதி கிடைக்கவில்லை என்று விவசய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் வேதனை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம், லக்கிம்பூரில் கடந்த ஆண்டு 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
அப்போது அமைதியாக நடந்து சென்று கொண்டிருக்கும் விவசாயிகள் மீது பின்னால் வேகமாக வரும் வாகனம் ஒன்று மோதி தூக்கி வீசி விட்டு நிற்காமல் செல்கிறது. பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓராண்டு ஆகிறது
இதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். விவசாயிகள் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. எஸ்யூவி காரை ஏற்றி கொல்லப்பட்டதில் 4 விவசாயிகள் கொலை செய்யப்பட்டனர். அதையடுத்து ஏற்பட்ட வன்முறையில் பத்திரிகையாளர் என மேலும் 4 பேர் உயிரிழந்தனர். மொத்தம் 8 பேர் கொல்லப்பட்ட இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பம் நடைபெற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.

தேசம் ஒருநாளும் மறக்காது
ஆனாலும் இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ள விவசாய சங்க தலைவர் ரகேஷ் திகாய்த், வரும் திங்கட்கிழமை ஒரு ஆண்டு ஆனதை அனுசரிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒன்று கூட உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த விவசாய சங்க தலைவர் ராகேஷ் திகாய்த் கூறியதாவது:- கடந்த ஆண்டு இதே நாளில் திகுனியா கிராமத்தில் நடைபெற்ற வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தை இந்த தேசம் ஒருநாளும் மறக்காது.

விவசாயிகள் திரள்வார்கள்
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை. அமைதியான அந்த வாரத்தில், வன்முறை வெடித்து 8 பேரின் உயிரை காவு வாங்கியது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான சம்பவம். நாட்டில் உள்ள விவசாயிகள் ஒருபோதும் இந்த சம்பவத்தை மறக்க மாட்டார்கள். இந்த சம்பவத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிக்கும் விதமாக வரும் திங்கட்கிழமை நாடு முழுவதும் விவசாயிகள் திரள்வார்கள்'' என்றார்.

குரல் எழுப்ப மட்டுமே முடியும்
மேலும் உரிய நீதி கிடைப்பதில் ஏற்பட்ட தாமதத்திற்கு மாநில அரசே காரணம் என்று ராகேஷ் திகாய்த் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக ராகேஷ் திகாய்த் கூறியதாவது:- அரசியல் அமைப்பையோ சட்ட நடைமுறைகளையோ ஆளும் தரப்பு நம்புவதில்லை. தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறது என்றார். அப்போது குறுக்கிட்ட செய்தியாளர்கள், உங்களின் (ராகேஷ் திகாய்த்) அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ராகேஷ் திகாய்த், ''மக்கள் கோரிக்கை வைத்து குரல் எழுப்ப மட்டுமே முடியும். மற்றவை அரசாங்கத்தின் கைகளில் தான் உள்ளது'' என்றார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications