ஷாக்! வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்.. பிடித்து ஜெயிலில் தள்ளிய உத்தரபிரதேச போலீஸ்
லக்னோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி வீட்டில் 3 நாள் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு கொண்டாட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.

பிரதமர் மோடி வேண்டுகோள்
மேலும் ஒவ்வொருவரும் திங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக்கொடியை படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி ஏராளமானவர்கள் சமூக வலைதள பக்கங்களின் படத்தை மாற்றியள்ளனர். மேலும் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் 13ம் தேதி (நேற்று) முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் முதல் குமரி வரை தேசியக்கொடி
அதன்படி இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியுள்ளனர். மேலும் பலர் தங்களின் வாகனங்களில் தேசியக்கொடியை கட்டிவைத்து சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இன்றும், நாளையும் இன்னும் ஏராளமானவர்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தேசியக்கொடி
இந்நிலையில் தான் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ஒருவர் பாகிஸ்தான் தேசியக்கொடியை வீட்டில் ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றினர்.

சல்மான் கைது
இதுதொடர்பாக சல்மான் (வயது 21), உறவுக்கார பெண் ஷானாஸ் (22) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றியதாக சல்மானை போலீசார் கைது செய்தனர். மேலும் பாகிஸ்தான் தேசியக்கொடியை உருவாக்கிய அவரது உறவுக்கார பெண் ஷானாஸ் தயாரித்து கொடுத்த நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதவிர தேசியக்கொடி ஏற்ற 18 வயது நிரம்பாத ஒருவர் உதவி செய்த நிலையில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
மாஸ் காட்டும் இந்தியா.. கடற்படையின் பலம் டபுளாகுது! உள்ளே வந்த ஐஎன்எஸ் தாராகிரி! -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு












Click it and Unblock the Notifications