ஷாக்! வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞர்.. பிடித்து ஜெயிலில் தள்ளிய உத்தரபிரதேச போலீஸ்
லக்னோ: இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி வீட்டில் 3 நாள் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்த நிலையில் உத்தர பிரதேசத்தில் உள்ள வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தியா சுதந்திரம் அடைந்ததன் 75வது ஆண்டு கொண்டாட்டம் வரும் திங்கட்கிழமை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
'ஆஸாதி கா அம்ருத் மஹோத்ஸவ்' எனும் பெயரில் இந்த சுதந்திர தினம் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு செய்யப்பட்டன.

பிரதமர் மோடி வேண்டுகோள்
மேலும் ஒவ்வொருவரும் திங்களின் சமூக வலைதள பக்கங்களின் முகப்பில் தேசியக்கொடியை படமாக வைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறி இருந்தார். அதன்படி ஏராளமானவர்கள் சமூக வலைதள பக்கங்களின் படத்தை மாற்றியள்ளனர். மேலும் 'ஹர் கர் திரங்கா'(இல்லம்தோறும் மூவர்ணக் கொடி) எனும் இயக்கத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் ஆகஸ்ட் 13ம் தேதி (நேற்று) முதல் 15 வரை 3 நாட்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காஷ்மீர் முதல் குமரி வரை தேசியக்கொடி
அதன்படி இந்தியாவில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றியுள்ளனர். மேலும் பலர் தங்களின் வாகனங்களில் தேசியக்கொடியை கட்டிவைத்து சுதந்திர தின கொண்டாட்டத்துக்கு தயாராகி வருகின்றனர். இன்றும், நாளையும் இன்னும் ஏராளமானவர்கள் தங்களின் வீடுகளில் தேசியக்கொடியை ஏற்றலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் தேசியக்கொடி
இந்நிலையில் தான் உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் பகுதியில் ஒருவர் பாகிஸ்தான் தேசியக்கொடியை வீட்டில் ஏற்றியது சர்ச்சையை ஏற்படுத்தியது. தாரியா சுஜான் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேடுபர் முஸ்தகில் என்ற கிராமத்தில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் பாகிஸ்தான் தேசியக்கொடியை அகற்றினர்.

சல்மான் கைது
இதுதொடர்பாக சல்மான் (வயது 21), உறவுக்கார பெண் ஷானாஸ் (22) உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு வீட்டில் பாகிஸ்தான் தேசியக்கொடி ஏற்றியதாக சல்மானை போலீசார் கைது செய்தனர். மேலும் பாகிஸ்தான் தேசியக்கொடியை உருவாக்கிய அவரது உறவுக்கார பெண் ஷானாஸ் தயாரித்து கொடுத்த நிலையில் அவரை போலீசார் தேடி வருகின்றனர். இதுதவிர தேசியக்கொடி ஏற்ற 18 வயது நிரம்பாத ஒருவர் உதவி செய்த நிலையில் அவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications