Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதெப்படி இருக்கு.. கனவு கன்னியாக மாறிய மனைவி.. டெய்லி லேட்டாக வேலைக்கு போன போலீஸ்காரர்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பணிக்கு தாமதமாக சென்ற ஆயுதப்படை காவலரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அந்த காவலர் அளித்த விளக்கத்தை பார்த்து அதிகாரிகள் ஆடிப்போய் உள்ளனர்.

தமிழகத்தில் காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து ஆயுதப்படை உள்பட வெவ்வேறு பிரிவுகள் உள்ளன. அதேபோல் உத்தர பிரதேச மாநிலத்தில் பிஏசி என்ற பிரதேஷிக் ஆயுதப்படை (PAC அல்லது Pradeshik Armed Constabulary) உள்ளது.

uttar pradesh constable

உத்தர பிரதேசத்தை பொறுத்தவரை இந்த பிரிவு என்பது அந்த மாநிலத்தில் ‛பாரா மிலிட்டரி ஃபோர்ஸ்' என்று அழைக்கப்பட்டு வருகிறது. வன்முறை, இருதரப்பு இடையேயான மோதல் உள்ளிட்ட சட்டம் - ஒழுங்கு பிரச்சனை, மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இந்த படைப்பிரிவை சேர்ந்த காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த படைப்பிரிவில் காவலராக பணியாற்றி வரும் ஒருவர் கடந்த மாதம் 16ம் தேதி பணிக்கு தாமதமாக சென்றார். காலை 9 மணிக்கு அவர் பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர் தாமதமாக பணிக்கு சென்றார். இதனால் பணி விளக்க கூட்டத்தில் அவரால் பங்கேற்க முடியவில்லை. அதுமட்டுமின்றி அவர் தனது சீருடையை சரியாக அணியவில்லை. இவர் பணிக்கு அடிக்கடி தாமதமாக வருகிறார் என்ற புகார் ஏற்கனவே இருந்தது.

'ஈரோடு போலீஸ் ஏட்டு நவீன்குமார் வீட்டில்'.. ஜன்னலில் எட்டிப் பார்த்து.. அதிர்ந்து போன காவலர்
இதனால் 44வது பட்டாலியனின் ஜி ஸ்குவாட்டில் கமாண்டராக பணியாற்றி வரும் மது சூதன் சர்மா அந்த காவலருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். பணிக்கு தாமதமாக வந்ததற்கான காரணம் பற்றி ஒருநாளில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நோட்டீஸ்க்கு காவலர் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.

இதுதொடர்பாக அந்த காவலர் கொடுத்த விளக்கத்தில், ‛‛பிப்ரவரி 16ம் தேதி பணிக்கு நான் தாமதமாக வந்தேன். இதற்கு முக்கிய காரணம் என் மனைவி தான். எனக்கும், எனது மனைவிக்கும் இடையே பிரச்சனை உள்ளது. இருப்பினும் இரவில் நான் தூங்கும்போது மனைவி எனது கனவில் வருகிறார். அவள் என் மார்பில் அமர்ந்து என் ரத்தத்தை குடிக்க முயன்று கொல்ல பார்க்கிறாள். இதனால் இரவு முழுவதும் தூங்க முடியாமல் மனஉளைச்சலை தருகிறது.

அதேபோல் எனது தாயும் நரம்பு சார்ந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனாலும் என்னால் நிம்மதியாக இருக்க முடியில்லை. மேலும் என்னிடம் நம்பிக்கை என்பது இல்லாத நிலை உள்ளது. வாழ்வதற்கான விருப்பம் என்பது என்னிடம் இல்லை. கடவுளிடம் சரணடைய நான் விரும்புகிறேன். அதற்கான வழிமுறையை கூறுங்கள்'' என்று கூறியுள்ளார். இந்த விளக்கத்தை பார்த்து அதிகாரிகள் அதிர்ந்துபோயினர்.

இந்த கடிதம் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் அவருக்கு உண்மையாகவே அந்த பிரச்சனை இருந்தால் மனநல ஆலோசகர் மூலம் ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதேவேளையில் மற்றொரு தரப்பினரோ வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+