இந்தியா கூட்டணியை விட்டு தப்பி ஓடிய RLD: உ.பி.யில் 2 சீட் கொடுத்தது பாஜக- அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி!
லக்னோ: லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து 2 தொகுதிகளில் போட்டியிட ராஷ்டிரிய லோக் தள் (RLD, ஆர்எல்டி) கட்சி ஒப்புக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருந்த ராஷ்டிரிய லோக் தள் கட்சி திடீரென பாஜக கூட்டணிக்கு ஓடுவது சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளன.
"இந்தியா" கூட்டணியில் 28 கட்சிகள் இணைந்து பாஜகவுக்கு எதிராக லோக்சபா தேர்தலை எதிர்கொள்ள வியூகம் வகுத்தன. ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதி பங்கீடு விவகாரம் இந்தியா கூட்டணியில் பெரும் பிரச்சனையாக வெடித்தது.

அதேநேரத்தில் "இந்தியா" கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மீண்டும் ஓடிவிட்டார். இது இந்தியா கூட்டணியை திகிலடைய வைத்தது. பீகாரில் இந்தியா கூட்டணியின் கூட்டணி ஆட்சியை கைவிட்டுவிட்டு பாஜகவுடன் இணைந்து மீண்டும் முதல்வராகிவிட்டார் நிதிஷ்குமார்.
இதே பாணியில் உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுடன் பேச்சுவார்த்தை நடத்திய ராஷ்டிரிய லோக் தளமும் தற்போது முடிவெடுத்திருக்கிறது. இந்தியா கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தளம் கட்சிக்கு உ.பி.யில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
ஆனால் தற்போது ராஷ்டிரிய லோக் தள் கட்சியானது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருக்கிறதாம். மேலும் உபியில் 2 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிடுமாம். அப்படி பாஜக கூட்டணியில் ராஷ்டிரிய லோக் தள் இணைந்தால் மத்திய அமைச்சர் பதவி, மாநில அமைச்சர் பதவி, எம்.எல்.சி. பதவிகள் தரப்படும் என பாஜக தரப்பு உறுதி அளித்துள்ளதாம். இதனாலேயே ராஷ்டிரிய லோக் தள் கட்சித் தலைவர் ஜெயந்த் சவுத்ரி பாஜக பக்கம் தாவலாம் என முடிவெடுத்துவிட்டாராம்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர்கள், ஜெயந்த் சவுத்ரி அப்படி எல்லாம் முடிவெடுக்க மாட்டார் என நம்புகிறோம். இந்தியா கூட்டணியிலேயே நீடிக்கவே வாய்ப்பிருக்கிறது என்கின்றனர். ஆனால் பெரும்பாலான ஊடகங்கள், ராஷ்டிரிய லோக் தள் கட்சியானது பாஜக பக்கம் போவது உறுதி என திட்டவட்டமாக தெரிவித்து வருகின்றனர். இது இந்தியா கூட்டணி தலைவர்களையும் காங்கிரஸையும் கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாம்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications