Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பரபர உத்திரபிரதேசம்..3ஆம் கட்ட வாக்குப்பதிவுக்கு தயார்..களமிறங்கும் அகிலேஷுக்கு கைகொடுக்குமா கர்ஹால்

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்திரபிரதேசத்தில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கான பிரசாரம் இன்று ஓய்வு அடைந்துள்ள நிலையில், கர்ஹால் தொகுதியில் போட்டியிடும் அகிலேஷ் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சத்பால் சிங் பாகேல் போட்டியிடுகிறார்.

உத்தரபிரதேச சட்டசபை மொத்தம் 403 தொகுதிகளை உள்ளடக்கியது. எனவே குறைந்தபட்ச பெரும்பான்மை பெறுவதற்கு 202 தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏற்கனவே 2 கட்ட வாக்குப் பதிவு உபியில் முடிவடைந்துள்ளது.

முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 14ஆம் தேதி 2ஆம் கட்ட வாக்குப் பதிவு சஹாரான்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 55 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது.

உத்திர பிரதேச தேர்தல்

உத்திர பிரதேச தேர்தல்

2017ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் வெற்றி பெற்று அசத்தியது. யோகி ஆதித்யநாத் தலைமையில் அங்கு ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அங்கு மீண்டும் களம் கண்கிறார் யோகி. தற்போது ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைப்பதற்கு பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இந்த நிலையில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என சமாஜ்வாடி கட்சியின் அகிலேஷ் யாதவ் பல்வேறு பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறார்.

பாஜகவினர் உறுதி

பாஜகவினர் உறுதி

2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 300க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் இம்முறை 200க்கும் அதிகமான இடங்களைத்தான் பாஜகவால் பெற முடியும் என்கின்றன கருத்து கணிப்புகள். களத்தில் பாஜகவுக்கு சமாஜ்வாதி கட்சி கடும் போட்டியைத் தரும் என்றும் அக்கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து 3ஆம் கட்ட தேர்தலை சந்திக்க பாஜகவினர் தயராகி வருகின்றனர். கருத்துகணிப்புகளை பொய்யாக்கி அதிக இடங்களை கைப்பற்றுவோம் என பாஜகவினர் உறுதியாக கூறி வருகின்றனர்.

3ஆம் கட்ட தேர்தல்

3ஆம் கட்ட தேர்தல்

இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 3வது கட்ட தேர்தல் நாளை மறுநாள் அதாவது 20ஆம் தேதி நடக்கிறது. கசன்கஞ்ச், இடா, ஹத்ராஸ், பிரோசாபாத், மணிப்பூரி, பரூக்பாத், கணுஞ், எட்டுவா, ஹவ்ரிவா, கான்பூர் தெகத், ஹம்பூரிபூர், ஜலுன், மகோபா, ஜான்சி, லலித்பூர், கான்பூர்நகர் ஆகிய 16 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறு நிலையில், அந்த பகுதிகளில் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையொட்டி இந்த தொகுதிகளில் இன்று பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

களம் காணும் அகிலேஷ்

களம் காணும் அகிலேஷ்

நாளை மறுநாள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் மொத்தம் 627 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களுக்கு சுமார் 2 கோடி மக்கள் வாக்களிக்கவுள்ளனர். மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தொகுதிகளில் கர்ஹால் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும், அவரை எதிர்த்து பாஜக மத்திய அமைச்சரான சத்ய பால் சிங் பாகேல் பாஜக வேட்பாளராக போட்டியிருகிறார். இதனால் 3ஆம் கட்ட தேர்தலில் கர்ஹால் தொகுதி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+