காட்டு விலங்குகளின் தொல்லை இனி இருக்காது.. பயிர்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் அரசு புது முயற்சி
லக்னோ: மலையோரத்தில் பயிரிடும் விவசாயிகள் காட்டு விலங்குகளால் அடிக்கடி பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதற்கு முடிவு கட்ட யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி அரசு புதிய யோசனைகளை அமல்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த வரலாற்றை யோகி ஆதித்யநாத் முறியடித்து வெற்றிகரமாக 6 ஆண்டு கால ஆட்சியை நிறைவு செய்திருக்கிறார். எனவே அம்மாநில அரசு இதனை சாதனையாக கொண்டாடி வருகிறது. அதேபோல புதிய திட்டங்களையும் யோகி ஆதித்யநாத் அறிவித்து வருகிறார்.

அதன் தொடர்ச்சியாக தற்போது மலை வாழ் மக்களையும், அவர்களின் வேளாண் பயிர்களையும் காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்க புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், "உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் கிடைப்பதும், கழிவுநீர் முறையாக வெளியேற்றப்படுவதும் உறுதி செய்யப்படும் என்று கூறியுள்ளார். இதற்கு 'அமரித் 1.O' எனும் திட்டத்தையும் அறிவித்திருக்கிறார். தற்போது வரை மாநில தலைநகரான லக்னோவில் மட்டும் சுமார் 8.7 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 1 லட்சம் வீடுகள் பாக்கி இருக்கின்றன. மீதமுள்ள வீடுகளுக்கும் விரைவில் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்றும், இதேபால மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளுக்கு இந்த வசதிகள் விரிவாக்கப்படும்.
'முதலமைச்சரின் கெத் சுரக்ஷா யோஜனா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் மூலம் விளைபொருட்கள் பாதுகாக்கப்படும். இந்த திட்டத்தின் கீழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.1.43 லட்சம் மானியமாக அரசு வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் வரைவு வேளாண் துறையால் தயாரிக்கப்பட்டு, விரைவில் அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், இத்திட்டம் மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்படும் என்று துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க 12 வோல்ட் மின்னோட்டத்துடன் கூடிய சூரிய மின் வேலி அமைக்கப்படும். இத்திட்டத்திற்கான பட்ஜெட்டை ரூ.75 கோடியில் இருந்து ரூ.350 கோடியாக உயர்த்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது. சோலார் கம்பி வேலி விலங்குகளுக்கு லேசான அதிர்ச்சியைக் கொடுக்கும், அவைகளுக்கு எந்தத் தீங்கும் செய்யாது. ஏதாவது ஒரு விலங்கு வேலியைத் தொட்டால் உடனே சைரன் ஒலிக்க தொடங்கிவிடும். இதனால் விலங்குகள் அங்கிருந்து தப்பி ஓடிவிடும். இது விவசாயிகளின் பயிர்களை நிச்சயம் பாதுகாக்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications