அடடே சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் யோகி.. உ.பியில் வேற லெவலில் வளரும் எம்எஸ்எம்இ தொழில்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களை வளர்க்கும் விதமாக 'உத்யமி மித்ரா யோஜனா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல் அதிகாரிகள் பதவிகள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில் தற்போது இதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
உத்தரப் பிரதேசம் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்துக்கொண்டிருப்பதாக யோகி ஆதித்தயநாத் கூறியுள்ளார். எதிர்வரும் 2025ம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்டிவிட வேண்டும் என்பதே தற்போதய திட்டமாகும். இந்நிலையில் இதற்கான ஆயத்த பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. முதற்கட்டமாக ஆண்டின் தொடக்கத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் மூலம் ரூ.35 லட்சம் கோடி அளவில் மாநிலத்தில் முதலீடுகள் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இந்த வளர்ச்சியை சாத்தியமாக்க வேண்டும் எனில் மாநிலத்தின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்புகளையும் மேம்படுத்த வேண்டும் என்று யோகி ஆதித்யநாத் முடிவெடுத்துள்ளார். இதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் நடத்தப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரில் இதுவரை இல்லாத அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மட்டுமல்லாது கல்வி, சுகாதாரம், தொலைத்தொடர்பு, அடிப்படை வசதிகள், பெண்கள் பாதுகாப்பு என 10 துறைகளை சிறப்பாக வளர்த்தெடுக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்த வரிசையில் தற்போது சிறுகுறு தொழில்கள் மீது அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. மாநிலத்தில் இந்த தொழில்களை வளர்த்தெடுக்க 'உத்யமி மித்ரா யோஜனா' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் செயல் அதிகாரிகள் பதவிகள் கடந்த சில ஆண்டுகளாக காலியாக இருந்த நிலையில் தற்போது இதற்கான ஆட்சேர்ப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பதவிகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், அடுத்து செயல்முறை தேர்வுக்கு தேர்வு வாரியம் தயாராகி வருகிறது.
ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ள எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்கள் குறித்த அறிவிப்பு ஏப்ரல் மாதம் 16ம் தேதி வெளியாகிறது. எழுத்துத் தேர்வில் 300 முதல் 400 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு செயல்முறை தேர்வு நடத்தப்படும். இது மே மாதத்தில் முடிவடையும். இதனையடுத்து 105 அதிகாரிகள் மாநிலம் முழுவதும் உள்ள MSME துறைசாார்ந்த அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவார்கள். அவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும்.
இவர்களின் பிரதான பணி, மாநிலம் முழுவதும் சிறு குறு மற்றம் நடுத்தர தொழில் முனைவோர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு கடன்களை வழங்குவதாகும். இந்த தொழில்களை வளர்ப்பதன் மூலம் மாநிலம் முழுவதும் கணிசமான அளவில் வேலை வாய்ப்புகளும் வழங்கப்படும். இது மொத்த பொருளாதாரத்தை உயர்த்த வழிவகுக்கும். பொருளாதார வளர்ச்சி 1 டிரில்லியன் இலக்கை எட்ட பெரிய அளவில் உதவி செய்யும் என்று மாநில அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications