உபி சட்டசபைத் தேர்தல் 2022: இன்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு - களத்தில் 613 வேட்பாளர்கள்
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
லக்னௌ: உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கான 7 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 54 தொகுதிகளுக்கு நடைபெறும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இன்றைய தினம் 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தராகண்ட், கோவா ஆகிய 5 மாநில சட்டசபைத் தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதில், பஞ்சாப், உத்தராகண்ட், கோவா மாநிலங்களில் ஒரே கட்டமாகவும், மணிப்பூரில் இரண்டு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன.
403 தொகுதிகள் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்ட சபைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உ.பி மாநில சட்டசபைத் தேர்தல்
அதன்படி முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடந்தது. 2வது கட்ட ஓட்டுப்பதிவு 14ஆம் தேதியும், 3 வது கட்டம் ஓட்டுப்பதிவு 20ஆம் தேதியும், 4வது கட்டம் 23ஆம் தேதியும், 5 வது கட்டம் 27ஆம் தேதியும், 6 வது கட்டம் மார்ச் 3ஆம் தேதியும் நடந்து முடிந்தது. இதுவரை 349 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

7ஆம் கட்ட வாக்குப்பதிவு
பூர்வாஞ்சல் பகுதியில் உள்ள 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 54 தொகுதிகளுக்கு இன்றைய தினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில், 613 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 2 கோடியே 6 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.

நக்சல்கள் ஆதிக்கம்
நக்சல்கள் ஆதிக்கம் உள்ள சாகியா, ராபர்ட்கஞ்ச், துத்தி ஆகிய தொகுதிகளில் மாலை 4 மணியுடன் வாக்குப்பதிவு நிறுத்தப்படும். மற்ற தொகுதிகளில் 6 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு
5 மாநில சட்டசபைத் தேர்தலிலும் பதிவான வாக்குகள் வரும் 10ஆம் தேதி வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. இந்தத் தேர்தலில் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும், பஞ்சாப் மாநிலத்தில் கூடுதல் இடங்களில் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 5 மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் இன்று மாலை வெளியாகின்றன.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications