Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாபியாக்களுக்கு அடைக்கலம்... பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்... போட்டு தாக்கிய யோகி ஆதித்யநாத்

Subscribe to Oneindia Tamil

லக்னோ: பயங்கரவாத செயல்களின் தாயாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது; கடவுள் ராமரை அவமதிக்கிறது; மாபியாக்களுக்கு அடைக்கலம் தருகிறது என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக சாடியுள்ளார்.

உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் அடுத்த ஆன்டு நடைபெற உள்ளது. தற்போதைய ஆளும் பாரதிய ஜனதா கட்சி, ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது.

உ.பி. தேர்தலை எதிர்கொள்ள பொறுப்பாளர்கள், துணை பொறுப்பாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள் என ஒரு பெரும் படையையே பாஜக மேலிடம் களம் இறக்கியுள்ளது. மத்திய அமைச்சர்கள் பலரும் உ.பி. தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தலுக்காக வளர்ச்சி திட்டங்கள்

தேர்தலுக்காக வளர்ச்சி திட்டங்கள்

இதனிடையே உ.பி.யின் குஷிநகர் மாவட்டத்தில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார். ரூ.400 கோடி வளர்ச்சி திட்டங்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ126 கோடியில் சாந்த் கபீர் நகரில் கட்டப்பட்ட சிறைச்சாலையையும் நேற்று யோகி ஆதித்யநாத் திறந்து வைத்தார்.

பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்

பயங்கரவாதத்தின் தாய் காங்கிரஸ்

இந்த நிகழ்ச்சியில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: உ.பி.யை ஆட்சி செய்த சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவை மாநிலத்தை இருளில் தள்ளிவிட்டன. மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய மின்சாரத்தை அந்த அரசுகள் வழங்கவில்லை. நாட்டின் அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் தாயாக இருக்கிறது காங்கிரஸ் கட்சி. அவர்களால் 2 இடங்களில் கூட வெல்ல முடியாது.

எதிர்க்கட்சிகள் மீது சாடல்

எதிர்க்கட்சிகள் மீது சாடல்

உ.பி.யில் கடவுள் ராமரின் பக்தர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் இன்று தாலிபான்களை ஆதரிக்கின்றனர். ஜாதியவாதத்துடன் குடும்ப அரசியல் செய்யும் அந்த சக்திகளை உ.பி. மக்கள் ஏற்கமாட்டார்கள். உ.பி.யில் நோய்களையும் வேலைவாய்ப்பையும் மாஃபியா ஊழல் காட்டாட்சியையும் கொண்டு வந்தவர்கள்தான் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள்.

காங். எதிர்காலம்?

காங். எதிர்காலம்?

ஆனால் பாஜகவோ, மாஃபியாக்களை இருக்க வேண்டிய இடத்தில் முடக்கி வைத்துள்ளது. பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுகிறது. மக்கள் மனங்களில் பாஜக இடம்பிடித்துள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஏழு இடங்களைக் கூட பெற முடியவில்லை. இந்த தேர்தலில் 2 பேர் கூட ஜெயிக்க மாட்டார்கள். இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+