Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'முடிந்தவரை போராடினோம்.. உபி தேர்தல் கருத்துக்கணிப்புக்கு பிறகு மனம் திறந்த பிரியங்கா காந்தி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தலில் எங்களால் முடிந்தவரை போராடினோம் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கு பிறகு பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், மணிப்பூர் என ஐந்து மாநில சட்டசபை தேர்தல்கள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியது.

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 403 இடங்களில் ஒற்றை இலக்க வெற்றியை தான் பெறும் என பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.

 காங்கிரஸ்

காங்கிரஸ்

உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை சந்தித்தது. கடந்த இரண்டு சட்டசபைத் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய தோல்வியே கிடைத்தது. அதுவும் கடந்த 2017 தேர்தலில் ஒற்றை இலக்க வெற்றியைப் பெற்றது. அதற்கடுத்து நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அங்கு போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியைத் தழுவினார்.

பிரியங்கா காந்தி

பிரியங்கா காந்தி

இதையடுத்து உத்தரப்பிரதேச காங்கிரசை மீண்டும் கட்டமைக்க பிரியங்கா காந்தியை நியமித்தது காங்கிரஸ் தலைமை. இதையடுத்து, பிரியங்கா காந்தியும் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை புதிதாக கட்டமைக்கும் பணியில் இறங்கினார். இந்த தேர்தலிலும் அவர் பிரசாரத்துக்கு சென்ற இடமெல்லாம் அவருக்காக அதிக மக்கள் கூட்டம் கலந்துகொண்டது.

தேர்தல்

தேர்தல்

இந்த தேர்தலில் காங்கிரஸ் தனித்து களம் இறங்கியது. மிகப்பெரிய வெற்றி கிடைக்காது என்றபோதிலும், கவுரவமான வெற்றிக்கு பிரசாரத்தை மேற்கொண்டது காங்கிரஸ். நேற்றுடன் உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் முடிந்தது. இதையடுத்து தேர்தல்லுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில் உத்தரப்பிரதேசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், இரண்டாவது இடத்தில் சமாஜ்வாதி கட்சியும் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 8-10 இடங்கள் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.

உழைப்பு

உழைப்பு

இதையடுத்து, பிரியங்கா காந்தி இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது, ''உத்தரப்பிரதேச தேர்தலில் எங்களால் முடிந்தவரை போராடினோம். தேர்தல் முடிவு வரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம். இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 159 பெண் வேட்பாளர்களோடு கொண்டாட உள்ளோம். அவர்களை சிறப்பிக்க இதைவிட சிறந்த தருணம் எதுவும் இல்லை'' என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+