உ.பி: முதல் கட்ட தேர்தல்: 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்- அகிலேஷ் ஆரூடம்
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 58 தொகுதிகளில் பாஜகவுக்கு வெறும் 8 இடங்கள்தான் கிடைக்கும்; சமாஜ்வாதி கட்சி- ராஷ்டிரிய லோக் தள் கட்சியே 50 இடங்களில் வெல்லும் என்று அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்டமாக மேற்கு உ.பி.யில் உள்ள 58 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது.

ஜாட்- முஸ்லிம்கள் இணைப்பு
கடந்த சட்டசபை தேர்தலின் போது மேற்கு உ.பி.யில் ஜாட்கள், முஸ்லிம்கள் மிக மோசமான மதமோதல்கள் காரணமாக தனித்தனியே ஒருமுகப்படுத்தப்பட்டனர். அப்போது பாஜகவுக்கு இது சாதகமாக இருந்தது. 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் குறிப்பாக மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்ட களம், ஜாட்களையும் முஸ்லிம்களையும் பிணைத்திருக்கிறது.

ராஷ்டிரிய லோக் தள் கட்சி
மேற்கு உ.பி.யில் ஜாட்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தக் கூடிய கட்சியாக ராஷ்டிரிய லோக்தள் கட்சி இருக்கிறது. இந்த கட்சி இப்போது சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. மேலும் ஓபிசி சமூகத்தினர் பெரும் எண்ணிக்கையில் வசிக்கக் கூடிய பகுதி இது. இதனால் மேற்கு உ.பி. தேர்தல் களம், சமாஜ்வாதி கட்சி தலைமையிலான கூட்டணிக்கே சாதகமாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

எங்களுக்கே மக்கள் ஆதரவு
இது தொடர்பாக இந்தியா டுடேவுக்கு அகிலேஷ் யாதவ் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: உ.பி. மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். சமாஜ்வாதி- ராஷ்டிரிய லோக் தள் கூட்டணியையே உ.பி மக்கள் ஆதரிக்கின்றனர். நாங்கள் மக்களுக்கு அளித்து வரும் தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.
Recommended Video

பாஜகவுக்கு 8 இடங்கள்..
லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை, ஹத்ராஸ் பலாத்கார சம்பவம் என உ.பி.யில் பாஜக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனது. பாஜக எம்.எல்.ஏக்கள் செல்லும் இடங்களில் மக்கள் விரட்டியடிக்கின்றனர். உ.பி.யில் பொதுமக்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அதனையே இப்போது தேர்தல் களத்தில் வெளிப்படுத்துகின்றனர். மேற்கு உ.பி.யில் 58 தொகுதிகளில் 50-ல் எங்கள் கூட்டணி வெல்லும்; பாஜகவுக்கு 8 இடங்களே கிடைக்கும். இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications