உ.பி.: பாஜகவின் மேலும் ஒரு எம்.எல்.ஏ. எஸ்கேப்... அகிலேஷின் கூட்டணி கட்சியில் இணைந்தார்!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்களில் ஒருவரும் எம்.எல்.ஏ.வுமான அவ்தார்சிங் பாதனா அக்கட்சியில் இருந்து விலகி ராஷ்டிரிய லோக்தள் கட்சியில் இணைந்தார்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆளும் பாஜகவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுத்து வருகின்றனர் அமைச்சர்கள் மற்றும் சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள். கடந்த 24 மணிநேரத்தில் 2 அமைச்சர்கள் உட்பட 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு விலகி சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர்.

குஜ்ஜார் தலைவர்
இதேபோல் குஜ்ஜார் சமூகத்தில் செல்வாக்கு பெற்ற தலைவரான அவ்தார்சிங் பாதனாவும் இன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். மேலும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி வைத்துள்ள ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் அவ்தார்சிங் பாதனா இன்று இணைந்தார். ஜெயந்த் சவுத்ரி முன்னிலையில் அவ்தார்சிங் பாதனா, ராஷ்டிரிய லோக் தள் கட்சியில் இணைந்தார்.

பாஜகவுக்கு பின்னடைவு
உ.பி. முசாபர்நகர் மிர்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அவ்தார்சிங் பாதனா. விவசாய சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்களின் போது மத்திய, மாநில அரசுகளின் நிலைப்பாட்டை அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். மேற்கு உ.பி.யில் பாஜக கடும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்படுகிறது. ஜாட் சமூகத்தினர் பாஜக மீது கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் குஜ்ஜார் சமூகத்தின் மூத்த அரசியல் தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி இருக்கிறார். இது பாஜகவுக்கு மேலும் பின்னடைவு என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

அகிலேஷ் கட்சியில் ஐக்கியம்
ஏற்கனவே பாஜகவில் இருந்து விலகியவர்கள் அகிலேஷ் யாதவை அடுத்தடுத்து சந்தித்து சமாஜ்வாதி கட்சியில் இணைத்துக் கொண்டனர். உ.பி. தேர்தலில் பாஜக கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சுமார் 100 இடங்களை இழக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். பாஜகவுக்கு பல தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி டஃப் பைட் கொடுக்கும் என்கின்றன அக்கணிப்புகள். இதனை உறுதிப்படுத்தும் வகையில் அடுத்தடுத்து பாஜக சீனியர் தலைவர்கள் அகிலேஷ் யாதவ் பக்கம் சாய்ந்து வருகின்றனர்.

7 கட்ட தேர்தல்
உ.பி.யில் பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன. மேற்கு உத்தரப்பிரதேச மாநில தொகுதிகளில் பிப்ரவரி 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
-
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications