இந்த ஒய்யார டீச்சருக்கு மழைநீரில் கால்படவே கூடாதாம்.. மாணவர்களை "பாலம்" கட்ட வைத்ததால் சர்ச்சை
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பள்ளியை சூழ்ந்துள்ள மழைநீரில் நடக்காமல் வரிசையாக நாற்காலிகளை போட்டு அதன் மீது ஏறி ஆசிரியை ஒருவர் நடக்கும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. இந்த நாற்காலிகளை மழை நீரில் நின்று மாணவர்கள் பிடித்து கொள்ளும் அவலமும் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கடந்த சில தினங்களாக கடும் மழை பெய்து வந்தது. இதனால் அங்குள்ள பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது.
தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கிவிட்டது. மேலும் மதுராவில் உள்ள ஒரு பள்ளியில் வெள்ள நீர் சூழ்ந்து கொண்டது. அந்த பள்ளி வளாகத்தை சுற்றியுள்ள மைதானத்தில் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

பள்ளி
இந்த நிலையில் அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர் பள்ளிக்கு வந்தார். அப்போது பள்ளியை சுற்றிலும் மழை நீர் கெண்டைகால்அளவுக்கு இருப்பதை கண்டார். இதனால் எப்படி பள்ளிக்கு உள்ளே செல்வது என யோசித்தார். அப்போது அங்கு படிக்கும் மாணவர்களை பள்ளி வாசலில் இருந்து அழைத்தார்.

மழை
அவர்களிடம் மழையால் என்னால் உள்ளே வர முடியாது. அதற்கு நீங்கள்தான் உதவி செய்யணும் என கூறினார். அதற்கு மாணவர்கள் என்ன செய்ய வேண்டும் டீச்சர் என கேட்டதற்கு, உள்ளே இருந்து ஏராளமான நாற்காலிகளை கொண்டு வாருங்கள், வரிசையாக வகுப்பு முதல் வாயில் வரை போடுங்கள் என உத்தரவிட்டார்.

மாணவர்கள், நாற்காலிகள்
மாணவர்களும் நாற்காலிகளை தூக்கிக் கொண்டு மழை நீரில் கால் வைத்தபடியே நாற்காலிகளை போட்டனர். அப்போது கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு ஒய்யாரமாக அந்த நாற்காலியில் ஏறி ஒவ்வொரு நாற்காலியாக தாவினார். அப்போது மாணவர்களை, நான் விழுந்துட போறேன், நாற்காலியை பிடியுங்கள் என கூறியுள்ளார்.
Recommended Video

நாற்காலியை பிடித்துக் கொண்ட மாணவர்கள்
அதற்கேற்ப மாணவர்களும் நாற்காலியை பிடித்துக் கொள்ள அந்த ஆசிரியை மழை நீரில் கால் படாமல், பிள்ளைகள் கால் மழை நீரில் நனைவது குறித்து கவலைப்படாமல் வகுப்பறைக்கு வந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தை பார்த்து பதறிய ஆசிரியர் ஒருவர் உடனே வீடியோவாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டுவிட்டார். இது கல்வித் துறையின் கண்களுக்கு தென்பட்டது. இதையடுத்து அந்த ஒய்யார ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்மையில் ஒரு பள்ளியில் ஆசிரியர் தூங்க அவருக்கு மாணவர்கள் விசிறிவிடும் காட்சிகளும் சர்ச்சையை கிளப்பின.












Click it and Unblock the Notifications