அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. பள்ளியில் விளையாடிய 3ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பள்ளியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்த நிலையில் அதற்கு மருத்துவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தனியாருக்கு சொந்தமான பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டது. பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

அதன்பிறகு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவ-மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். இந்த வேளையில் 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி மான்வி சிங்கும் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.
இந்த வேளையில் திடீரென்று மாணவி பள்ளி விளையாட்டு மைதானத்தில் மயங்கி கிடந்தார். இதுபற்றி உடனடியாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மான்வி சிங்கை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு மாணவி மான்வி சிங்கை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாணவி மான்வி சிங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இதனை கேட்டு மான்வி சிங்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
பெரும்பாலும் மாரடைப்பு என்பது இளம்வயதினர், முதியவர்களுக்கு தான் வருகிறது. விதிவிலக்காக சிறுவர், சிறுமிகளுக்கும் தற்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் மாரடைப்பு 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பள்ளி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛மைதானத்தில் விளையாடிபோது 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மயங்கினார். அவர் உடனடியாக மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போலீசாரின் கவனத்துக்கு சென்றது. ஆனால் மாணவி மான்வி சிங்கின் பெற்றோர் வழக்கு எதுவும் பதிவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டனர்.












Click it and Unblock the Notifications