அடுத்த நொடி நிச்சயமில்லாத வாழ்க்கை.. பள்ளியில் விளையாடிய 3ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த சோகம்
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள பள்ளியில் விளையாடி கொண்டிருந்த 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி திடீரென்று மயங்கி விழுந்தார். உடனடியாக மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இறந்த நிலையில் அதற்கு மருத்துவர் கூறிய காரணம் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் தனியாருக்கு சொந்தமான பள்ளி உள்ளது. நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளி செயல்பட்டது. பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.

அதன்பிறகு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவ-மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். இந்த வேளையில் 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி மான்வி சிங்கும் தோழிகளுடன் விளையாடி கொண்டிருந்தார்.
இந்த வேளையில் திடீரென்று மாணவி பள்ளி விளையாட்டு மைதானத்தில் மயங்கி கிடந்தார். இதுபற்றி உடனடியாக சக மாணவிகள் ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆசிரியர்கள் மான்வி சிங்கை மீட்டு அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன்பிறகு மாணவி மான்வி சிங்கை அவரது பெற்றோர் மேல் சிகிச்சைக்காக இன்னொரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று மாணவி மான்வி சிங் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மாணவி மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக டாக்டர்கள் கூறினர். இதனை கேட்டு மான்வி சிங்கின் பெற்றோர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.
பெரும்பாலும் மாரடைப்பு என்பது இளம்வயதினர், முதியவர்களுக்கு தான் வருகிறது. விதிவிலக்காக சிறுவர், சிறுமிகளுக்கும் தற்போது மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த வகையில் மாரடைப்பு 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவியின் உயிரை பறித்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி பள்ளி முதல்வர் வெளியிட்ட அறிவிப்பில், ‛‛மைதானத்தில் விளையாடிபோது 9 வயது நிரம்பிய 3ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மயங்கினார். அவர் உடனடியாக மருத்தவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் போலீசாரின் கவனத்துக்கு சென்றது. ஆனால் மாணவி மான்வி சிங்கின் பெற்றோர் வழக்கு எதுவும் பதிவு செய்யவேண்டாம் என்று கூறிவிட்டனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications