Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வாக்கு இயந்திரங்கள் மாற்றம்..? அகிலேஷ் அளித்த பகீர் புகார்..அதிகாரி சஸ்பெண்ட்.. பரபர உ.பி. தேர்தல்.!

Subscribe to Oneindia Tamil

லக்னோ : உத்திரப்பிரதேச மாநிலம் வாரணாசி சட்டமன்றத் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் மாற்றப்பட்ட எழுந்த புகார் தொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்ற நிலையில் வரும் மார்ச் 10ஆம் தேதியான நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

பெரிய அளவிலான அசம்பாவிதங்கள் இல்லாமல் தேர்தல் நடைபெற்ற நிலையில் நாளை மறுநாள் பலத்த பாதுகாப்புடன் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

அகிலேஷ் யாதவ்

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில் உத்திரப்பிரதேசத்தில் வேட்பாளர்களுக்கு தெரியாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை விவரங்களுக்கு மாற்றம் செய்வதாகவும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது குற்றம் சாட்டியுள்ளார்.

முறைகேடு என புகார்

முறைகேடு என புகார்

அயோத்தியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற உள்ளதாகவும் அதனால் பாஜக பயப்படுவதாக கூறியுள்ள அகிலேஷ் , தேர்தல் ஆணைய அதிகாரிகள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைக்கேடு செய்தனர் எனவும், வாரணாசி தேர்தல் அதிகாரி உள்ளூர் வேட்பாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு சென்றனர் என்றார். இந்தப் புகார் குறித்து தேர்தல் ஆணையம் கவனிக்க வேண்டும் எனவும் அகிலேஷ் கூறினார்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

மேலும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் எந்த வழியில் கொண்டு செல்லப்பட்டாலும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும், இது ஒரு திருட்டு போல எனக் கூறியுள்ளார். மேலும் நமது வாக்குகளை நானம் காப்பாற்ற வேண்டும் எனவும் இந்த முறைகேடுகளை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம் ஆனால் அதற்கு முன் ஜனநாயகத்தை காப்பாற்ற நாம் மக்கள்முன் வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன் எனவும் அகிலேஷ் தெரிவித்தார்.

Recommended Video

    5 மாநில தேர்தல்... தொடங்கியது வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை பிடிக்கப்போவது யார்?
    அதிகாரி சஸ்பெண்ட்

    அதிகாரி சஸ்பெண்ட்

    இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் நேற்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக வாரணாசியின் மூத்த நிர்வாக அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயிற்சி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதில் விதிகளை மீறியதாக வாரணாசி கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் என்.கே.சிங் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+