சிஏஏ போராட்ட வன்முறை.. சாட்டையை சுழற்றிய யோகி அரசு.. ரூ.57 லட்சம் செலுத்த 60 பேருக்கு நோட்டீஸ்
லக்னோ: சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் பொதுச்சொத்துகள் சேதப்படுத்தப்பட்ட நிலையில் ரூ.57 லட்சத்தை நஷ்டஈடாக வழங்ககோரி 60 பேருக்கு உத்தர பிரதேச போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இங்கு கலவரம், வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பர்களின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி கலவரம், வன்முறையில் பொதுச்சொத்துகளை சேதப்படுத்தினால் அதற்கான இழப்பீட்டை வன்முறையாளர்கள், கலவரக்காரர்களிடம் இருந்து வசூலிக்கும் முறை நடைமுறையில் உள்ளது.

சிஏஏ எதிர்ப்பு போராட்டம்
இந்நிலையில் தான் மத்திய அரசு சார்பில் நாட்டில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ)அமல்படுத்தப்படும் என்ற தகவல் வெளியானது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் கடும் போராட்டங்கள் வெடித்தன. உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் அருகே நஹ்தூர் போலீஸ் நிலைய பகுதியில் சிஏஏவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் போராட்டம் நடந்தது. இது வன்முறையாக மாறியது.

2 பேர் கொலை-சொத்துகள் சேதம்
அனாஸ், சல்மான் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். போலீஸ் ஜீப் தீவைத்து எரிக்கப்பட்டது. மேலும் பொதுச்சொத்துகள் அடித்து உடைக்கப்பட்டன. போலீஸ்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

60 பேருக்கு நோட்டீஸ்
இதையடுத்து வன்முறையாளர்களிடம் இழப்பீட்டு தொகையை வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி சிஏஏ எதிர்ப்பு போராட்ட வன்முறை தொடர்பாக 60 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதா நஹ்தூர் போலீசார் தெரிவித்துள்ளனர். அதில் ரூ.57 லட்சம் நஷ்டஈடு கேட்கப்பட்டுள்ளது என நஹ்தூர் போலீஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிஏஏ என்றால் என்ன?
இந்தியாவில் சிஏஏ எனும் குடியுரிமை சட்டம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக இந்தியா வரும் இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், பார்ஸிகள், சமணர்கள், புவுத்தர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வழி செய்கிறது. இதில் முஸ்லிம்கள் இல்லை என்பதால் அவர்கள் நாடு முழுவதும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிஏஏவை இந்தியாவில் அமல்படுத்தக்கூடாது என அவர்கள் கோரினர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications