சபாநாயகர் சொல்வதை நீங்களே கேட்க மாட்டீங்க.. மீட்டிங்கில் ராகுல் காந்தியிடம் சண்டைக்கு போன அமைச்சர்
லக்னோ: ‛‛லோக்சபாவில் சபாநாயகர் சொல்வதை நீங்களே கேட்கமாட்டீங்க.. அப்புறம் நான் எதுக்கு நீங்க சொல்றதை எல்லாம் கேட்க வேண்டும்?'' என்று ராகுல் காந்தியின் மீட்டிங்கில் உத்தர பிரதேச மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் கேள்வி எழுப்பி வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவுக்கு சென்றவர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.
லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி உள்ளார். இவர் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையிதான் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவின் ரேபரேலியில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

தொகுதியின் எம்பி என்ற முறையில் ராகுல் காந்தி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் உத்தர பிரதேச மாநில எம்பி தினேஷ் பிரதாப் சிங்கும் பங்கேற்றார். ராகுல் காந்தியும், தினேஷ் பிரதாப் சிங்கும் அருகருகே அமர்ந்து இருந்தனர்.
அப்போது இடையிடையே தினேஷ் பிரதாப் சிங் பேசினார். அதற்கு ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்தார். ராகுல் காந்தி, ‛‛இந்த கூட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். கூட்டத்தில் பேச விரும்பினால் முதலில் அனுமதிபெற வேண்டும்'' என்றார்.
இதனை அவர் ஏற்கவில்லை. இதனால் அமைச்சர் தினேஷ், ‛‛லோக்சபாவில் சபாநாயகர் சொல்வதை நீங்கள் கேட்பது இல்லை. அவரது சொல்லுக்கு நீங்கள் கீழ்படிவது இல்லை. அப்படியென்றால் நான் ஏன் உங்களின் பேச்சை கேட்க வேண்டும்? நீங்கள் சொல்வது போல் நடந்து கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
இதனை கேட்டு ராகுல் காந்தி அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் தினேஷ் இப்படி சொல்வார் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. மேலும் தற்போது அமைச்சர் தினேஷ் பாஜகவில் இருந்தாலும் கூட முதலில் அவர் காங்கிரஸ் கட்சியில் தான் பயணித்தார்.
அதன்பிறகு தான் பாஜகவுக்கு சென்றார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ரேபரேலியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக சார்பில் களமிறங்கி தோற்றார். சோனியா காந்தி 5,34,918 ஓட்டுகள் வாங்கிய நிலையில் தினேஷ் பிரதாப் சிங் 2,67,740 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
அதன்பிறகு கடந்த ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட்டார். அவரை எதிர்த்தும் பாஜக சார்பில் தினேஷ் பிரதாப் சிங் போட்டியிட்டார். ராகுல் காந்தி 6,87,649 ஓட்டுகள் பெற்ற நிலையில் தினேஷ் பிரதாப் சிங் 2,97,619 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்தார்.
இப்போது தினேஷ் பிரதாப் சிங் உத்தர பிரதேச மேல்சபை உறுப்பினராக உள்ளார். அதாவது எம்எல்சியாக உள்ளார். அதோடு அந்த மாநிலத்தின் தோட்டக்கலைத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். ஒரு காலத்தில் ராகுல் காந்தி, சோனியா காந்தியுடன் நெருக்கமாக இருந்தார். இப்போது அவர் பாஜகவில் சேர்ந்து அவரை எதிர்த்து பேசி உள்ளார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications