காசநோய் இல்லாத மாநிலமாக உத்தரப் பிரதேசம் விரைவில் மாறும்! முதல்வர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கிராமங்களிலிருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற பாஜக அரசு தயாராகி வருகிறது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
மாநிலத்தில் உள்ள கிராம பஞ்சாயத்துகளை நோயற்ற கிராமமாக மாற்ற மாநில அரசு தயாராகி வரும் நிலையில், காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க நாங்கள் முயன்று வருகிறோம் என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "காசநோய் இல்லாத உத்தரப் பிரதேச கிராமங்களை உருவாக்க மாவட்ட காசநோய் அலுவலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதிகாரி (டிபிஆர்ஓ) ஆகியோரின் கூட்டு முயற்சியுடன் விரைவில் களத்தில் இம்முயற்சி செயல்படுத்தப்படும்.

அனைத்து தலைமை மருத்துவ அலுவலர்கள் மற்றும் மாவட்ட காசநோய் அதிகாரிகளுக்கு (டிடிஓ) சுகாதார இயக்குநர் ஜெனரல் உட்பட குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளார். மேலும், காசநோய் இல்லாத ஊராட்சிகளை உருவாக்குவது குறித்து டிடிஓ மற்றும் டிபிஆர்ஓ மட்டங்களில் கூட்டங்கள் நடத்தப்படும் . காசநோய்க்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் பின்னர் அந்தந்த பகுதிகளில் உள்ள கிராம தலைவர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள்.
அதே நேரத்தில், மாவட்ட காசநோய் மையத்துடன் இணைந்து, காசநோய் இல்லாத நிலையை அடையத் தயார்ப்படுத்த பஞ்சாயத்துகள் நிர்வாகிகள் உதவுவார்கள். இந்த விழிப்புணர்வு கட்டத்தில், காசநோய் என்றால் என்ன? அதன் பல்வேறு அம்சங்கள், தடுப்பு உத்திகள், தவறான எண்ணங்கள், சிகிச்சையை முறையாக கடைப்பிடித்தலின் நன்மைகள் போன்றவை குறித்து விரிவாக விளக்கப்படும்.
அதேபோல மறுபுறம் மற்றொரு குழுவினர் கிராம பஞ்சாயத்துகளில் ஊடுருவி காசநோய் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பை மேற்கொள்கொள்வார்கள். பின்னர் இவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கான சிகிச்சையை அளிப்பார்கள். இப்படியாக காசநோய் முழுமையாக ஒழிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications