பெண்களுக்கான திட்டம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம்! நேரடியாக களத்திற்கு வந்த யோகி ஆதித்யநாத்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மிஷன் சக்தி திட்டத்தின் 4வது கட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த யோகி ஆதித்யநாத் சிறப்பு பொதுக்கூட்டங்களையும் பிரசாரங்களையும் மேற்கொள்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் மிஷன் சக்தி திட்டத்தின் 4ம் கட்டத்தை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.

இதனைத்தொடர்ந்து இந்த திட்டம் குறித்து பிரசாரம் மேற்கொள்ளவும் தொடங்கியுள்ளார். இன்று தொடங்கும் இந்த பிரசார பயணம் நவம்பர் 3ம் தேதி முடிவடைகிறது. மொத்தம் 12 பிரசார கூட்டங்களில் யோகி ஆதித்யநாத் பங்கேற்கிறார். இந்த மிஷன் சக்தி திட்டத்தின் மூலம் பெண்களுக்கு தற்காப்பு கற்பித்தல், அரசு திட்டங்களுடன் இணைத்தல், பெண்கள் தொடர்பான சட்டங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல், மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அரசு சார்பு திட்டங்களை பற்றி விவரிக்கப்படுகிறது.
எனவே இந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த திட்டம் குறித்து தானே நேரடியாக பிரசாரம் மேற்கொள்கிறேன் என யோகி ஆதித்யநாத் முன்வந்திருக்கிறார். மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலுக்கும் இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், இந்த பிரசாரம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications