இனி உத்தரப் பிரதேசம் முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைதான்! யோகி ஆதித்யநாத் அதிரடி அறிவிப்பு
லக்னோ: கிராம பஞ்சாயத்து அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ள 'சமர்த் 2023' எனும் திட்டம் உத்தரப் பிரதேசம் முழுவதும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் 25ம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் இது கிராமப்புற பொருளாதாரங்களில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யோகி ஆதித்யாநாத் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "உத்தரப் பிரதேசம் வரம்பற்ற சாத்தியக்கூறுகளைக் கொண்ட ஒரு மாநிலமாகும். இங்கு அனைத்து தொழில்கள் தொடங்குவதற்கும் சாத்தியங்கள் இருக்கின்றன.

இதனால் புதுப்புது திட்டங்கள்/கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. தற்போது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் தனிச் செயலகம் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன, விரைவில் ஒவ்வொரு கிராமப் பஞ்சாயத்துக்கும் தனிச் செயலகம் அமைக்கப்படும்.
செயலகம் வந்துவிட்டால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக மாவட்ட அல்லது மாநில தலைநகருக்கு வரவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் இந்த செயலகத்தில் கணினி ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். இவர்கள் கிராம மக்களுக்கு தேவையான சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை வழங்குவார்கள். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால் டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி செல்ல வேண்டும். இந்த திட்டம் மூலம் கிராமப்புற பொருளாதாரம் மேம்படும் என்பதில் சந்தேகம் இருக்காது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications