தொழிலதிபர்கள், முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உ.பி உருவாக்கியுள்ளது! முதல்வர் யோகி பெருமிதம்
லக்னோ: தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உத்தரப் பிரதேசம் வழங்கியுள்ளது என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற தேர்தலில் யோகி ஆதித்யநாத் முறியடித்துள்ளார். மக்களின் இந்த ஆதரவை நாடாளுமன்ற தேர்தலுக்கும் நீடிக்க வேண்டும் என்பதற்காக ஏராளமான புதிய திட்டங்களை அவர் தொடர்ந்து அறிவித்து வருகிறார். தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டில் பேசிய அவர் "உத்தரப் பிரதேசத்தை வலுவான பொருளாதார மாநிலமாக மாற்றியிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "குற்றவாளிகளுக்கு எதிரான மாநில அரசின் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை நாட்டிற்கு ஒரு எடுத்துக்காட்டு. தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உத்தரப் பிரதேசம் வழங்கியுள்ளது. ஐடிஐ மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் உள்ள மாணவர்களை இன்டர்ன் ஆக வேலைக்கு அமர்த்துமாறு தொழிலதிபர்களை கேட்டுக்கொள்கிறேன். உத்தரப் பிரதேசம் ஒரு காலத்தில் வறுமையும், குற்ற செயல்கள் நிரம்பிய மாநிலமாக இருந்தது. தற்போது இந்த நிலை மாறியிருக்கிறது.
ஒருபுறம் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பையும், மறுபுறம் மாணவர்களுக்கான கல்வியையும் மாநில அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் மாநிலம் முழுவதும் உள்ள 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் 'நிபுன்' அந்தஸ்தை பெற்றிருக்க வேண்டும் என ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளேன். 'நிபுன்' அந்தஸ்து என்றால், 3ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு எண்ணறிவு மற்றும் எழுத்தறிவு முழுமையாக வழங்கியிருக்க வேண்டும் என்பதை தான் நிபுன் அந்தஸ்து என்று சொல்லப்படுகிறது.அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 75 நிபு தொகுதிகள் உருவாக்கப்படும். இந்த தொகுதிக்குள் 44 ஆயிரம் தொடக்கப்பள்ளிகள் அடங்கும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications