மதரசா பள்ளிகளுக்கு யோகி அரசு கிடுக்கிப்பிடி.. கண்டிப்பாக தேசிய கீதம் பாட வேண்டும் என உத்தரவு
லக்னோ: உத்தர பிரதேசத்தில் அரசு மானியத்தில் செயல்படும் 560 மதரசா பள்ளிகள் உள்பட மொத்தமுள்ள 16 ஆயிரத்து 461 மதரசா பள்ளிகள் உள்ளன. ரம்ஜான் விடுமுறைக்கு பிறகு மதரசா பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதிய நடைமுறை ஒன்றை பின்பற்ற மதரசா கல்வி வாரியம் உத்தரவிட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தில் பாஜக தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை பிடித்துள்ளது. யோகி ஆதித்யநாத் மீண்டும் முதல்வராக பதவியேற்று செயல்பட்டு வருகிறார்.
இந்த மாநிலத்தில் மொத்தம் 16 ஆயிரத்து 461 மதரசா பள்ளிகள் உள்ளன. இதில் 560 பள்ளிகள் அரசு மானியத்துடன் இயங்கி வருகின்றன. மாநிலம் முழுவதும் மதரசா பள்ளிகளுக்கு ஏராளமான மாணவர்கள் சென்று வருகின்றனர்.

ஆலோசனை கூட்டம்
இந்நிலையில் தான் மதரசா பள்ளிகளின் ஒருசில இடங்களில் தேசியகீதம் பாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் பாடுவது இல்லை என்ற புகார் எழுந்தன. இதுபற்றி உத்தர பிரதேச மதரசா கல்வி வாரிய கூட்டத்தில் ஆலோசிக்கப்ட்டது. அப்போது அனைத்து மதரசா பள்ளிகளிலும் தேசியக்கீதம் கட்டாயமாக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கூட்டம் மார்ச் 24ல் நடந்தது. இதை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் துவங்கின.

மீண்டும் பள்ளிகள் திறப்பு
இதற்கிடையே, ரம்ஜான் மாதத்தையொட்டி மதரசா பள்ளிகளுக்கு மார்ச் 30 வரை மே 11 வரை விடுமுறை அளிக்கப்பட்டன. இதையடுத்து அந்த முடிவு நிலுவையில் இருந்தது. தற்போது ரம்ஜான் விடுமுறை முடிந்து மீண்டும் மதரசா பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மதரசா பள்ளிகளுக்கு வர துவங்கி உள்ளனர்.

தேசியகீதம் கட்டாயம் என உத்தரவு
இந்நிலையில் தான் உத்தர பிரதேச மதரசா கல்வி வாரியத்தின் பதிவாளர் எஸ்என் பாண்டே அனைத்து மாவட்ட சிறுபான்மை நலத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் இறைவணக்கத்தின்போது ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக தேசிய கீதம் பாட வேண்டும். இதை பின்பற்றுவதை மாவட்ட சிறுபான்மை நல அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் கூறுவது என்ன?
இதுபற்றி சிறுபான்மை நலத்துறை அமைச்சர் டேனிஷ் அசாத் அன்சாரி கூறுகையில், ‛‛சிறுபான்மை மக்களுக்கு மதரசா பள்ளியின் கல்வி முக்கியமானது. இதனுடன் தேசியகீதம் பாடும்போது அவர்கள் சமூகத்தின் மதிப்பை நன்கு அறிவார்கள். இப்போது கணிதம், அறிவியல் கணினி உள்ளிட்ட பிற பாடங்களுடன் இஸ்லாமிய மதநூல்களையும் மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநில அரசு மதரசா பள்ளிகளின் கல்வித்தரத்தை உயர்த்த முயற்சி மேற்கொண்டு வருகிறார்'' என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications