ரூ.5000 ‛டிஸ்கவுண்ட்’.. அக்.31க்குள் சொத்து வரி கட்டினால் ஆஃபர் - 5% தள்ளுபடி தந்த மதுரை மாநகராட்சி
மதுரை: மதுரையில் 31.10.2024ம் தேதிக்குள் சொத்து வரி கட்டுவோருக்கு 5 சதவீதம் வரை அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் தள்ளுபடி செய்யப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவற்றின் நிர்வாகங்கள் என்பது மக்கள் செலுத்தும் வரிப்பணத்தை நம்பியே உள்ளது. ஆனால் மக்கள் ஆண்டுதோறும் வரியை முறையாக செலுத்துகிறார்களா? என்றால் அது கேள்விக்குறித்தான்.

அதாவது ஒரு தரப்பினர் வரியை ஒவ்வொரு முறையும் முறையாக செலுத்திவிடுகிறார்கள். ஆனால் இன்னொரு தரப்பு வரி செலுத்துவது இல்லை. இப்படி வரி செலுத்தாமல் இருப்பது சொத்து உரிமையாளர்களுக்கு அபராதத்துக்கு வழிவகுக்கும். அதேபோல் உள்ளாட்சி அமைப்புகளையும் நிதி நெருக்கடியில் தள்ளும்.
இதனால் தான் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாநகராட்சிகளும் சொத்து வரி வசூலிக்கும்போது அதனை அனைத்து மக்களும் குறிப்பிட்ட தேதிக்குள் கட்டுவதற்கான சலுகைகளை அறிவிக்கின்றன. ஏனென்றால் சொத்து வரி தான் ஒரு மாநகராட்சிக்கு நல்ல வருவாயை ஈட்டி கொடுக்கும். அந்த வகையில் தான் தற்போது மதுரை மாநகராட்சி இன்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் ஆஃபர்! இன்றே சொத்து வரி கட்டினால் 5 சதவீதம் தள்ளுபடி! ரூ 5000 மிச்சம்!
இதுதொடர்பாக மதுரை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ‛‛மதுரை மாநகராட்சிக்கு 2024-2025ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை 31.10.2024 தேதிக்குள் செலுத்தும் சொத்து வரி உரிமையாளர்களுக்கு சொத்து வரி தொகையில் 5 சதவீதம் (அதிகபட்சமாக ரூ.5,000) தள்ளுபடி வழங்கப்படும். எனவே பொதுமக்கள் வருகின்ற 31.10.2024ம் தேதிக்குள் சொத்து வரியினை செலுத்தி பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரியை பொறுத்தமட்டில் முதல் அரையாண்டு, இரண்டாவது அரையாண்டு என்று தனித்தனியே வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அரையாண்டு என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 30ம் தேதி வரையிலான 6 மாதங்களை குறிக்கும். இரண்டாவது அரையாண்டு என்பது அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரையிலான 6 மாதத்தை குறிக்கும்.
இதில் அரையாண்டு தொடங்கும் முதல் 30 நாட்களில் சொத்து வரி செலுத்துவோருக்கு தான் 5 சதவீதம் வரை அல்லது அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை தள்ளுபடி என்பது வழங்கப்படுகிறது. தற்போது 2வது அரையாண்டு தொடங்கி உள்ளது. இதில் முதல் 30 நாட்களை மனதில் வைத்து மதுரை மாநகராட்சி சொத்து வரிக்கான தள்ளுபடி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications