உயிரை பறித்த சிக்கன் கிரேவி.. பட்டதாரி இளைஞர் பலியானது எப்படி? மதுரையில் என்ன நடந்தது?
மதுரை: மதுரையில் சுடவைத்து சிக்கன் கிரேவியை சாப்பிட்ட பட்டதாரி இளைஞர் வாந்தி, வயிற்றுபோக்கால் பாதிக்கப்பட்டு பலியாகி உள்ளார்.
மதுரை கோசாகுளம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தரராஜ். இளைஞரான இவர் வீட்டில் இருந்தே டிரேடிங் மார்க்கெட்டிங் பணியை மேற்கொண்டு வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் தான் கடந்த 26ம் தேதி ஆனந்தராஜின் தந்தை மேலபனங்காடியில் உள்ள ஹோட்டலில் இருந்து செட்டிநாடு சிக்கன் கிரேவி வாங்கி வந்துள்ளார். இதனை அன்று இரவு ஆனந்தராஜ் தனது குழந்தையுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது சிக்கன் கிரேவி மீதம் இருந்துள்ளது.
இதையடுத்து மறுநாள் காலையில் எழுந்த ஆனந்தராஜ், மீதமிருந்த சிக்கன் கிரேவியை சுடவைத்து மீண்டும் சாப்பிட்டுள்ளார். இதனை சாப்பிட்ட பிறகு அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் வாந்தி எடுத்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினர் ஆனந்தராஜை மீட்டு பிபி குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சிகிச்சையை தொடர்ந்து ஆனந்தராஜ் நலமானார். வீடு திரும்பினார். ஆனாலும் அவருக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனை தீரவில்லை. இதையடுத்து கடந்த 28 ம் தேதி அவருக்கு மீண்டும் ஊசி செலுத்தப்பட்டது. ஆனாலும் உடல்நலம் சரியாகவில்லை. இதற்கிடையே தான் அவர் திடீரென்று அன்று மாலையில் மயங்கி உள்ளார்.
இதையடுத்து அவர் மீண்டும் அவர் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன்பிறகு மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே ஆனந்தராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதாவது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்துள்ளார்.
இந்நிலையில் தான் ஆனந்தராஜின் உடல்நலக்குறைவுக்கு சுடவைத்து சாப்பிட்ட சிக்கன் கிரேவி தான் காரணம் என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்












Click it and Unblock the Notifications