இந்த முறை பாரத் மாதா கி ஜெய் கிடையாது! வெற்றிவேல்! வீரவேல் என முழங்கிய மோடி! ரூட் மாறுது!
மதுரை: மதுரையில் என்டிஏ கூட்டணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் உரையை தொடங்கி பிரதமர் மோடி, பாரத் மாதா கி ஜெய் என்பதற்கு பதில் வெற்றிவேல்! வீரவேல்! என தனது உரையை தொடங்கியுள்ளார்.
மதுரையில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெறுவது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனது. சில நாட்களுக்கு முன்னர்தான் இந்து அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையில், மசூதிக்கு அருகில் உள்ள கல் தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று பஞ்சாயத்தை கிளப்பயிருந்தன. இது தொடர்பாக அந்த அமைப்புகள் நடத்திய போராட்டம், வழக்குகள் உள்ளிட்டவை மதுரையை உலுக்கியிருந்தது.

இப்படி இருக்கையில், தற்போது என்டிஏ பொதுக்கூட்டம் மதுரையில் நடப்பதும், அதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில், மோடி வழிபாடு செய்தததும் கவனம் பெற்றிருக்கிறது.
வழக்கமாக மோடி பங்கேற்று பேசும் கூட்டங்களில், 'பாரத் மாதா கி ஜெய்' என்றுதான் முழங்குவார். இதற்கு முன்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற கூட்டங்களில் இதேபோன்று முழக்கங்களை எழுப்பியிருந்தார். ஆனால், கூட்டத்தில் மக்களிடையே இந்த முழக்கம் பெரிய அளவில் சென்று சேரவில்லை. இப்படி இருக்கையில்தான் இந்த முறை 'வெற்றிவேல் வீரவேல்' என முழங்கியுள்ளார். இது தமிழர்களிடையே தன்னையும், பாஜகவையும் கொண்டு செல்ல எளியதாக இருக்கும் என்று பிரதமர் நம்பியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications