தவெக நிர்வாகி திருமண விழாவில்.. திடீரென மணமேடையில் மயங்கி விழுந்த மணப்பெண்ணால் பரபரப்பு
மதுரை: மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் திருமண விழாவில் மணமேடையிலேயே மணப்பெண் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மதுரை மாவட்டம், அருள்ராஜ்புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் இளைஞர் பாசறையைச் சேர்ந்த முனீஸ்குமார், சுபஸ்ரீ ஆகியோரின் திருமணம் மதுரையில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தவெக கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் கலந்துகொண்டார்

அருண்ராஜை மேலதாளங்கள் முழங்க நிர்வாகிகள் வரவேற்றனர். தொடர்ந்து, மணமேடைக்குச் சென்று மணமக்களை அருண்ராஜ் பூங்கொத்தைக் கொடுத்து வாழ்த்தினார். அப்போது, திடீரென மணமேடையிலேயே மணமகள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உறவினர்கள் உடனடியாக சூழ்ந்த நிலையில், மணமகள் அறைக்கு சுபஸ்ரீஅழைத்துச் செல்லப்பட்டார். அருண்ராஜ் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார்.
உடனே, அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு சிறிது நேரத்தில் நலமடைந்தார். காலை உணவு உட்கொள்ளாமல் இருந்ததால் மயக்கம் ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications