Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமைச்சர் ரகுபதிக்கு சிக்கல்? திருப்பரங்குன்றம் தீபம்.. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சேர்க்க மனு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் கார்த்​திகை தீப வழக்​கில் தமிழக அமைச்​சர் ரகுபதி மீதும் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கோரி உயர் நீதி​மன்ற மதுரை கிளைல் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. அமைச்சர் ரகுபதியை எதிர்மனுதாரராக சேர்க்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றக் கோரி ராம.ரவிக்​கு​மார், பரமசிவம் உள்​ளிட்​டோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த தனி நீதிப​தி ஜி.ஆர்.சுவாமிநாதன், மலை உச்​சி​யில் உள்ள தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என உத்​தர​விட்​டார்.

Contempt Plea Filed Against Minister Regupathy in Thiruparankundram Deepam Case

இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத​தால் மதுரை மாவட்ட ஆட்​சி​யர், மாநகர காவல் ஆணை​யர், கோயில் செயல் அலு​வலர், காவல் துணை ஆணை​யர் ஆகியோ​ருக்கு எதி​ராக நீதி​மன்ற அவம​திப்பு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனு நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் முன்​னிலை​யில் பிப்ரவரி 2-ல் விசா​ரணைக்கு வந்​த​ போது மதுரை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், காவல் ஆணை​யர் லோக​நாதன், செயல் அலு​வலர் நாராயணன் ஆகியோர் நேரில் ஆஜராகி, நீதி​மன்ற உத்​தரவை நிறைவேற்றாததற்கு மன்​னிப்பு கோரினர்.

பின்​னர் நீதிப​தி, காவல் ஆணையர் லோக​நாதன், துணை ஆணை​யர் இனிகோ திவ்​யன், செயல் அலு​வலர் யக்​ஞ​நா​ராயணன் ஆகியோர் அடுத்த விசா​ரணை​யின் போது நீதி​மன்​றத்​தில் ஆஜராகு​வ​தில் இருந்து விலக்கு அளித்​தும், மார்ச் 2-ல் மாவட்ட ஆட்​சி​யர் பிர​வின்​கு​மார் ஆஜராகு​மாறும் உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில், திருப்பரங்குன்றம் விவ​காரத்​தில் தமிழக அமைச்​சர் ரகுபதி மீதும் நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை எடுக்​கக் கோரி, மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான பரமசிவம் தரப்​பில் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்யப்​பட்டுள்​ளது.

திருப்பரங்குன்றம் தீபத்​தூண் வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது சட்​டம்​ ஒழுங்கு பிரச்​சனை ஏற்​பட்​ட​தால் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றாமல் 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்ட​தாக அதி​காரி​கள் கூறினர். ஆனால், அமைச்​சர் ரகுபதி திருப்பரங்குன்றம் உத்​தரவை நடை​முறைப்​படுத்​தக் கூடாது என்​ப​தற்​காகவே 144 உத்​தரவு பிறப்​பிக்​கப்​பட்​டது என்​றார்.

மேலும், 144 தடை உத்​தரவு பிறப்​பிக்​காமல் இருந்​தால், திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்​தி​கையன்று தீபம் ஏற்றி இருப்​பார்​கள் என்​றும், அப்​படி தீபம் ஏற்றி இருந்​தால் அதுவே வழக்​க​மாக மாறி​விடும் என்​ப​தால்​தான் தடுத்​தோம் என்​றும் அமைச்சர் ரகுபதி பேட்டி அளித்​துள்​ளார். இதனால் அமைச்​சர் ரகுப​தி​யை​யும் நீதி​மன்ற அவம​திப்பு வழக்​கில் சேர்க்க வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

அமைச்சரின் இந்தக் கருத்தில் உள்நோக்கம் உள்ளதாகவும் எனவே அவர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கவும் மனுவில் கோரப்பட்டுள்ளது. அமைச்சர் ரகுபதியை இவ்வழக்கில் மற்றொரு எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனுவுக்கு வழக்கு எண் வழங்​கப்​பட்​டுள்​ளது. மார்ச் 2-ல் பிர​தான நீதி​மன்ற அவம​திப்பு மனு விசா​ரணைக்கு வரும்​போது, இந்த மனு​வும் விசா​ரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+