மதுரையில் கொட்டித்தீர்த்த கனமழை..மாட்டுத்தாவணி அருகே குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்..மக்கள் தவிப்பு
மதுரை: மதுரையில் பெய்த கனமழை காரணமாக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே உள்ள குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நீர்வழிப்பாதையை ஆக்கிரமிப்பு தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பபு செய்ததன் காரணமாகவே வெள்ள நீர் தேங்கியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரையில் கடந்த 2 நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. மையப் பகுதிகளான மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தெற்குவாசல், தெப்பக்குளம், மாட்டுத்தாவணி, கே.கே.நகர், அண்ணாநகர், தமுக்கம், கோரிப்பாளையம், பெரியார் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.

மாட்டுத்தாவணி பேருந்து நிறுத்தத்தில் திருச்சி, சிவகங்கை, ராமநாதபுரம் பரமக்குடி பேருந்துகள் நிறுத்துமிடத்தில் மழை நீர் வெள்ளம் போல் தேங்கி உள்ளது. இதனால் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் அவதி அடைந்தனர். மாட்டுத்தாவணியில் செல்ல மழை நீர் வடிகால்களை சீர் செய்ய பயணிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால், அங்கு வரும் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், ஆங்காங்கே மழை நீர் தேங்கி உள்ளது. மாவட்ட ஆட்சியர் வளாகத்திலும் மழைநீர் தேங்கி இருக்கும் நிலையில், குறைதீர் முகாமுக்கு வந்த பொதுமக்கள் மழைநீரில் நடந்து வந்தனர்.
தெப்பக்குளம் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அனுப்பானடி சாலை உள்ளிட்ட இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதால் பள்ளிக்கு செல்வோர்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர், மாநகராட்சி ஊழியர்கள் தாமதமாக வந்து மழை நீரை அகற்றினர்.
குறிப்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீர் குளம் போல் காட்சியளிக்கின்றது. ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ச்சியாக மழை நீர் தேங்கி நிற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதால், குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் முன் வர வேண்டும் என்றும் மழை நீர் தேங்கி நிற்காத அளவிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே கனமழையால் மாட்டுத்தாவணியை அடுத்த உத்தங்குடி அருகே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. முழங்கால் அளவிற்கு பெருகியுள்ள தண்ணீரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தனியார் ஒருவர் ஆக்கிரமிப்பு காரணமாகவே குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வெள்ளநீரை அகற்ற மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாகும்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications