கொடிக் கம்பங்கள் அகற்றக்கோரிய வழக்கு.. 13 மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பிக்களுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: மதுரை உட்பட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகளை அகற்றக் கோரிய வழக்கில் 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் பதிலளிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சாலிகிராமத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், "கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, ராமநாதபுரம், திண்டுக்கல், கரூர், புதுக்கோட்டை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் ஆகிய 13 தென் மாவட்டங்களில் ஏராளமான இடங்களில் அனுமதி பெறாமல் கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் பேனர்கள், போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த மாவட்டங்களில் அரசு புறம்போக்கு இடங்கள், மாநில நெடுஞ்சாலை, கிராமச் சாலைகள் மற்றும் பொது இடங்களில் அரசியல் மற்றும் சாதி அடிப்படையிலான பிளக்ஸ் போர்டுகள், போஸ்டர்கள் ஒட்டப்படுகின்றன. பேனர்கள் கட்டப்படுகின்றன. இவைகளால் தேவையற்ற மோதல்கள் ஏற்படுகிறது. தமிழ்நாடு உள்ளாட்சி விதிகளின்படி போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள், போர்டுகள் வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி எந்த அனுமதியும் பெறப்படுவதில்லை.
அனுமதி பெறாமல் செயல்படுபவர்கள் மீது அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் முறையாக அனுமதி பெறாமல் அரசியல் மற்றும் சாதிய அமைப்புகளின் கொடிக் கம்பங்கள், பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்கவும், அவற்றை அகற்றவும் உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அனுமதி பெறாத பிளக்ஸ் பேனர்கள், கட்சி கொடிக் கம்பங்களை அகற்றுவது தொடர்பாக பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தொடர்ந்து வழக்குகள் தாக்கலாகி வருகின்றன. மனு தொடர்பாக 13 மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 4 வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
-
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
கொங்கு மண்டலத்தில் 5, சென்னை 1, மதுரை 1, சேலம் 0.. பாஜகவை கன்ட்ரோலில் எடுத்த எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
அண்ணா நகர் சிறுமி வழக்கு.. தினமும் விசாரணை நடத்தி விரைந்து முடிக்க ஐகோர்ட் உத்தரவு! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்











Click it and Unblock the Notifications