லட்சுமணன் வீரமரணம் அடைந்தது பெருமை.. ‘இன்னொரு மகனையும் அனுப்பி வைப்பேன்’- தந்தை கண்ணீர் மல்க பேச்சு!
மதுரை : எனது மகன் லட்சுமணன் வீரமரணம் அடைந்துள்ளார். அரசாங்கம் விரும்பினால் எனது இன்னொரு மகனையும் ராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பி வைப்பேன் என வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் தந்தை தர்மராஜ் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தின் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் உள்ளிட்ட மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
ராணுவ வீரர் லட்சுமணனின் வீரமரணத்தைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான திருமங்கலம் அருகேயுள்ள டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில், வீரமரணமடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் ஆசை குறித்து கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார் அவரது தந்தை தர்மராஜ்.

தமிழக வீரர் வீரமரணம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் வாட்டர்ஹெய்ல் கான்சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த பகுதிக்கு பாதுகாப்பு படை வீரர்கள் விரைந்தனர். அங்கு நடந்த தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரணமடைந்தனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்ற வீரரும் வீரமரணம் அடைந்தார்.

லட்சுமணன்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.புதுப்பட்டி கிராமத்தைச் சார்ந்த தர்மராஜ் - ஆண்டாள் தம்பதியரின் இரட்டை மகன்களில் மூத்த மகன் ராமன், இளைய மகன் லட்சுமணன். விவசாயக் குடும்பத்தில் பிறந்த லட்சுமணன் கடந்த 2019 ஆம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றார். அந்த ஆண்டே ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கிடையே நிகழ்ந்த சண்டையில் லட்சுமணன் வீரமரணம் அடைந்துள்ளார்.

பெரும் சோகம்
ராணுவ வீரர் லட்சுமணனின் சொந்த ஊரான டி.புதுப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வீரமரணமடைந்த ராணுவ வீரரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். லட்சுமணனின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

தந்தை கண்ணீர் மல்க பேச்சு
இந்நிலையில், லட்சுமணனின் தந்தை தர்மராஜ் தனது மகன் வீரமரணம் குறித்து கண்ணீர் மல்க பேசியுள்ளார். "எனது மகன் லட்சுமணன் போரில் வீர மரணம் அடைந்தது எங்கள் குடும்பத்திற்கு பெருமை. ராணுவத்திற்காக எனது மூத்த மகனையும் நாட்டிற்கு அர்ப்பணிக்கிறேன். அரசாங்கம் விரும்பினால் எனது மூத்த மகனையும் ராணுவத்திற்கு பணியாற்ற அனுப்பி வைப்பேன்.

லட்சுமணனின் ஆசை
வீட்டு நிலைமை குறித்து போனில் கேட்டான். உடன்பிறந்தவனுக்கு ஏதாவது வேலை வாங்கிக் கொடுக்க வேண்டும், தொழில் செய்ய உதவ வேண்டும் என்று நினைத்தான். முதலில் அவனுக்கு கல்யாணம் செய்து வைத்து விடலாம். பிறகு எனக்குப் பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னான்" என கதறி அழுதபடி தெரிவித்துள்ளார் தர்மராஜ்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications