அறிவார்ந்த அரசியல்வாதி.. சுந்தர்.சி-யால் பயத்தில் இருக்காரு.. பிடிஆரை சீண்டும் பாஜக நிர்வாகி குஷ்பு!
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக சுந்தர் சி களமிறங்கி இருப்பதால், அறிவார்ந்த அரசியல்வாதியான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நிலைகுலைந்து போயிருப்பதாக நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். சுந்தர் சி மண்ணன் மைந்தர் என்று கூறியுள்ள குஷ்பு, தமிழ் கலாச்சாரத்திற்காக உறுதியாக நிற்பவர் என்றும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணியின் வேட்பாளராக சுந்தர் சி களமிறக்கப்பட்டுள்ளார். திமுக சார்பாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் போட்டியிடுகிறார். ஏற்கனவே தொகுதியில் அறிமுகமான முகமாக இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை சுந்தர் சி-யால் வீழ்த்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இருந்தாலும் நடிகை குஷ்பு மற்றும் ஏசி சண்முகம் இருவரும் சுந்தர்.சி-க்கு ஆதரவாக இருக்கின்றனர். அதேபோல் அதிமுகவின் மன்னன் மற்றும் எஸ்ஸார் கோபி உள்ளிட்டோரும் சுந்தர்.சி-க்கு பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளனர். இருந்தாலும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை வீழ்த்த முடியுமா என்பது சந்தேகம் தான். இந்த நிலையில் குஷ்பு எக்ஸ் பக்கத்தில் பிடிஆரை சீண்டி இருக்கிறார்.
அதில் குஷ்பு, சுந்தர் சி அரசியலில் நுழைந்திருப்பதை கண்டு அறிவார்ந்த அரசியல்வாதி என்று சொல்லப்படும் நிலைகுலைந்து போயிருப்பது போல் தெரியது. அதுவே பல உண்மைகளை சொல்கிறது. இரட்டை இலை சின்னத்தில் சுந்தர் சி போட்டியிடுவது மதுரை மத்திய தொகுதி மக்களின் மனதை தொட்டுள்ளது. இதனால் சுந்தர்.சி-யை வெளியூர்காரர் என்கிறார்கள்.
ஆனால் நாம் எல்லோரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் நமது வீடு என்று சொல்லும் இடத்திற்கே அந்நியர்களாகிவிடுகிறோம்.. உள்ளூர்காரர், வெளியூர்காரர் என்பதை வரையறுப்பது பிறப்பு அல்ல.. அது நாம் சார்ந்திருக்கும் இடம் தான். அர்ப்பணிப்புடன் பணியாற்றினால், யாரும் வெளியூர்காரர் கிடையாது. சுந்தர்.சி வெளியூர்காரர் அல்ல.. அவர் தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர் தான்.
தொடர்ச்சியாக பணியாற்றி மக்களுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். தமிழ் கலாச்சாரத்திற்காக உறுதியால் நின்றவர். ஆனால் அரசியல்வாதிகளால் குறுகிய அடையாளங்களை பிளவுகளையும் கடந்து அடுத்தக் கட்டத்திற்கு செல்ல முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.
-
ஹலோ பிடிஆர்.. ஸ்கூல் பையன் மாதிரி.. வாய்சவடால்விட்ட குஷ்பு.. சுந்தர்.சி-யை கோர்த்துவிட்ட மனைவி! -
சுந்தர்.சி-க்கு அரசியல் தெரியாதா? மதுரை மத்திய தொகுதி மக்கள் மிரளப் போறாங்க.. பில்டப் ஏற்றும் குஷ்பு -
பிடிஆரை தோற்கடிக்க புது டீம் போடும் குஷ்பு.. சுந்தர்.சிக்காக விஜயிடமே பேசிட்டாராமே.. ஏன்? பின்னணி! -
டாப் நடிகரின் காதலை சேர்த்து வைத்த நடிகை திரிஷா.. ஆனால் இப்போ டைவர்ஸ் ஆக போகுதே ! பீல் பண்ணும் மனைவி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது?












Click it and Unblock the Notifications