பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை.. சாகற வரைக்கும் ஜெயில்ல போடுங்க... கோர்ட் அதிரடி...
மதுரை: மதுரையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிறுமி மற்றும் தாய் புகாரில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மதுரை மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மதுரையில் மதுபானம் குடிக்கும் பழக்கம் உள்ள நபர் ஒருவர் குடித்துவிட்டு வந்து அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டும் வழக்கம் போல் குடித்து விட்டு வந்த அவர் வீட்டில் தனியாக இருந்த மகளிடம் சில்மிஷம் செய்துள்ளார்.

வீட்டில் தாய் இல்லாததால் சிறுமி தப்பிக்க முயல சிறுமியை கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் வெளியில் சென்றுவிட்டு வீடு திரும்பிய தாயிடம் மகள் நடந்ததை கூற போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்றுக்கொண்ட மதுரை சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தந்தையை கைது செய்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு விசாரணை நீதிமன்றத்திற்கு சென்றது.
இந்த வழக்கு மதுரை மாவட்டம் போக்சோ நீதிமன்றத்தில் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைபெற்று வந்தது. வழக்கு போக்சோ நீதிமன்ற நிதிபதி ராதிகா முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் மகளை பெற்றத் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்தது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி தந்தைக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் அவரை மத்திய சிறைக்கு அழைத்து சென்று சிறையில் அடைத்தனர். தந்தைக்கு தண்டனை கொடுத்திருப்பதால், மகளும், கணவனுக்கு தண்டனை கிடைத்ததால் மனைவியும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். பள்ளி மாணவிகளுக்கு எதிரான பாலியல் கொடுமை சம்பவங்கள் நடந்து வரும் சூழலில் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சமூக ஆர்வலர்கள் பாராட்டி உள்ளனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications