அடிச்சது பாருங்க லக்.. மதுரையில் சிதறி கிடந்த ரூ.500 நோட்டுகள்.. அப்படியே அள்ளி சென்ற பொதுமக்கள்
மதுரை: மதுரை ஊசிலம்பட்டி தேனி ரோட்டில் சாலை முழுக்க 500 ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் சாலையில் இருந்த அந்த ரூ.500 நோட்டுகளை அள்ளி சென்றனர். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இலவசமாகப் பணம் கிடைத்தால் யார் தான் வேண்டாம் எனச் சொல்வார்கள். அப்படிக் கிடைத்தால் அதை அதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். ஆனால், அனைவருக்கும் இந்த அதிர்ஷ்டம் கிடைக்காது.

இதற்கிடையே மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேனி சாலை முழுக்க ரூ.500 நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன. இதை அப்பகுதி வழியாகச் சென்ற மக்கள் அப்படியே அள்ளி சென்றனர்.
மதுரை சம்பவம்: மதுரை மாவட்டத்தில் பரபரப்பான சாலைகளில் ஒன்று உசிலம்பட்டி தேனி சாலை.. இன்று காலை இந்த பகுதியில் மக்கள் சென்ற போது சாலை முழுக்க ரூபாய் நோட்டுகள் சிதறிக் கிடந்துள்ளன.
உசிலம்பட்டி தேனி ரோட்டில் உள்ள மாமரத்துபட்டி விலக்கு பகுதியில் சென்ற வாகனத்தில் இருந்து இந்த 500 ரூபாய் நோட்டுகள் சிதறி நெடுஞ்சாலையில் விழுந்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்த வாகனத்தில் இருந்து ரூபாய் நோட்டுகள் கட்டுக்கட்டாக விழுந்துள்ளது என்பது குறித்த தகவல்கள் தெளிவாக இல்லை.
ரூ.500 நோட்டுகள்லச ஆனால், அந்த சாலை முழுக்க சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு 500 ரூபாய் நோட்டுகள் சிதறி கிடந்துள்ளன. இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக சாலையில் கிடந்த ரூ.500 நோட்டுகளைச் சிலர் எடுக்க தொடங்கியுள்ளனர். இதைப் பார்த்த மற்றவர்களும் சிதறிக் கிடந்த 500 ரூபாய் நோட்டுகளை அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் திடீரென மக்கள் சாலையில் திரண்டதால் அங்கு டிராபிக் பாதிப்பும் ஏற்பட்டது.
போட்றா வெடிய.. மதுரைக்கு ஆவின் பால் தந்த சர்ப்ரைஸ் பாருங்க.. அதுவும் எத்தனை நாட்கள் தெரியுமா? சபாஷ்
சிசிடிவி காட்சிகள்: இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது. சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் அங்குச் சிதறிக் கிடந்ததாக கூறப்படுகிறது. அந்த நோட்டுகள் எப்படி விழுந்தது.. இந்த வீடியோ போலீசார் கவனத்திற்கும் சென்றுள்ளது. திட்டமிட்டு யாராவது வீசி சென்றனரா.. அல்லது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததா என பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
அதேநேரம் இந்த பணம் தொடர்பாக இதுவரை யாருமே புகாரளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம் புகார் அளித்தாலும் பொதுமக்கள் பலர் இந்த ரூபாய் நோட்டுகளை அள்ளிச் சென்றதால் அதை மீட்க முடியுமா எனக் கேள்வியும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications