பாஜக வேண்டாம்.. முழுக்கு போட்ட டாக்டர் சரவணன்.. பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்ட கையோடு அறிவிப்பு
மதுரை: மதுரை மாநகர் பாஜக தலைவராக இருந்த டாக்டர் சரவணன் திடீரென்று அக்கட்சியில் இருந்து விலகினார். திமுகவின் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து கட்சியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.
மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தவர் டாக்டர் சரவணன். மதுரையில் மருத்துவமனை நடத்தி வரும் இவர் திமுகவில் இணைந்து எம்எல்ஏ வாக இருந்தார்.
கடந்த சட்டசபை தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்காததால் அவர் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் சேர்ந்தவுடன் அவருக்கு மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் அந்த தேர்தலில் தோல்வியடைந்தார்.

கட்சியில் இருந்து விலகல்
இதையடுத்து மதுரை மாநகர் பாஜக தலைவராக செயல்பட்டு வந்தார். மதுரை மாநகரில் பாஜகவை வளர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் தான் நேற்று இரவு டாக்டர் சரவணன் திடீரென்று பாஜகவில் இருந்து விலகி உள்ளார். மதுரையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை சந்தித்து பேசிய பிறகு டாக்டர் சரவணன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

வருத்தமளிக்கிறது
இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛நாங்கள் அஞ்சலி செலுத்தியபோது விரும்பதகாத செயல் நடந்துள்ளது. இது மனதை உறுத்தியது. காலையில் நடந்த காலணி வீச்சு சம்பவம் மனஅமைதியை கெடுத்துவிட்டது. மனஉளைச்சல் ஏற்பட்டது. பாஜகவின் மத வெறுப்பு அரசியல் பிடிக்கவில்லை. எனது வருத்தத்தை அவரிடம் கூறினேன்.

மன்னிப்பு கேட்க வந்தேன்
பாஜக தொண்டர்கள் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொண்டது வருத்தமளிக்கிறது. இப்போது மன நிம்மதியாக இருக்கிறது. தூக்கம் வராததால் அவரை சந்தித்தேன். இப்போது நிம்மதியாக தூங்குவேன். நான் வந்தது கட்சிக்கு தெரியாது. பதவியை விட மனநிம்மதி தான் வேண்டும். பாஜகவில் இனி தொடர மாட்டேன்'' எனக்கூறி கட்சியில் இருந்து விலகினார்.

காலணி வீச்சு சம்பவம்
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் கடந்த 11ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த ராணுவவீரர் லட்சுமணனும் வீரமரணம் அடைந்தார். இவரது உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது மரியாதை செலுத்தும் விஷயத்தில் பாஜகவினருக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு இடையே வார்த்தை போர் ஏற்பட்டது. இதையடுத்து பழனிவேல் தியாகராஜன் சென்ற கார் மீது பாஜகவினர் காலணி வீசப்பட்டது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தான் இன்று இரவு டாக்டர் சரவணன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications