அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி புதிய மைதானத்தில் நடைபெறுமா?.. மதுரை ஆட்சியர் விளக்கம்
மதுரை: ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி தொடங்கும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவது வழக்கம்.

இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாயில் 66 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு எங்கு நடத்துவது என்பது தொடர்பாக இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் நடந்த ஆலோசனைகளுக்கு பிறகு ஆட்சியர் சங்கீதா கூறியிருப்பதாவது: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்காக கீழக்கரை கிராமத்தில் 44 கோடி ரூபாய் செலவில் 6 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அடுத்த ஆண்டு வழக்கமான இடத்திலேயே நடைபெறும் என அறிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டு அலங்காநல்லூர் அரங்கில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வழக்கமாக நடக்கும் இடத்திலேயே இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டுக்கு என தனி ஸ்டேடியம் கட்டப்பட்டு வருகிறது.
இங்கு ஆயிரக்கணக்கானோர் அமர்ந்து போட்டிகளை பார்வையிட வசதியாக உள்ளது. இந்த மைதானத்தின் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நடந்து முடிந்துவிட்டன. கடந்த மார்ச் மாதம் இந்த அரங்க கட்டுமான பணிகள் தொடங்கின. 9 மாதங்களில் இவை சூப்பராக கட்டப்பட்டுள்ளன. மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய 50 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டி ஒன்று கட்டப்பட்டுள்ளது.
அது போல் காளைகளை கட்டி வைப்பதற்கான இடமும் அமைக்கப்படுகிறது. இந்த இடத்திலிருந்து வாடி வாசலுக்கு காளைகள் வரிசையாக அழைத்து வரப்படும். இங்கு நிர்வாக அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டாலும் இது ஒரு பொது மைதானம். இங்கு ஆண்டுதோறும் கபடி, ஃபுட்பால் போன்ற போட்டிகள் எல்லாம் தொடர்ந்து நடைபெறுகின்றன.
-
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு












Click it and Unblock the Notifications