ஆடல் பாடல் நிகழ்ச்சி.. இனி யாராவது மனு போட்டால் கடும் அபராதம்.. ஐகோர்ட் கிளை எச்சரிக்கை!
மதுரை : ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி பொதுநல மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம் சிந்தாமணிப்பட்டி பகுதியில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியசாமி என்பவர் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில் இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி யாரேனும் மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், ஆடல், பாடல் குறித்து அனுமதி கோரி மனு அளித்த 7 நாட்களுக்குள் உரிய முடிவு எடுக்கவேண்டும் என்ற முந்தைய உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும், ஏற்கனவே நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை முறையாக பின்பற்றி ஆடல் பாடல் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி காவல் நிலையத்தில் மனு அளித்தால் போதும், அதை விடுத்து, மனு தாக்கல் செய்தால் கடும் அபராதம் விதிக்கப்படும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கோயில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு மனு அளிக்கப்பட்டால், 7 நாட்களுக்குள் காவல்துறையினர் விழாக்குழுவுக்கு பதிலளிக்க வேண்டும், 7 நாட்களில் நடவடிக்கை இல்லையென்றால் அனுமதி அளிக்கப்பட்டதாக கருதி விழாக்குழுவினர் நிகழ்ச்சியை நடத்திக் கொள்ளலாம் என காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அண்மையில் உத்தரவை வெளியிட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications