16 மாதங்கள் ஆகுமாம்.. மதுரை டைடல் பார்க் பணிகள் எப்போது நிறைவடையும்? சோகத்தில் இளைஞர்கள்!
மதுரை: மதுரையில் கட்டப்பட்டு வரும் டைடல் பார்க் பணிகள் 16 மாதங்களில் நிறைவடையும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் மதுரையில் டைடல் பார்க்-க்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய நிலையில், கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனால் 2027ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்த பணிகள் நிறைவடையும் என்று கருதப்படுகிறது.
மதுரையின் மிகப்பெரிய கனவுகளில் ஒன்று டைடல் பார்க். 2023ஆம் ஆண்டு அதற்கான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதையடுத்து நிலம் கையகப்படுத்தப்பட்டு, சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் தொடங்கப்பட்டன. இதன்பின் டெண்டர் பணிகள் நடந்து, கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. மொத்தமாக 5.34 லட்சம் சதுர அடியில் தரைதளம் மற்றும் 12 தளங்களுடன் கட்டப்பட்டு வருகிறது.

இதன் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வட இந்திய தொழிலாளர்கள் அதிகமானோர் கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தரைதளம் கட்டி முடிக்கப்பட்டு, அடுத்தடுத்த பணிகள் நடந்து வருகின்றன. கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட போது 18 மாதங்களில் கட்டி முடித்து 2026 ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது.
இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்தால், இந்தியாவில் உள்ள முதன்மை நிறுவனங்கள் மதுரையில் தங்களின் அலுவலகங்களையும், முதலீடுகளையும் செய்ய தொடங்கும் என்று கருதப்படுகிறது. இதன் மூலமாக சுமார் 5 ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவைக்கு பின் மதுரை முக்கிய மாவட்டங்களில் ஒன்றாக மாறும்.
இந்த நிலையில் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள் எப்போது நிறைவடையும் என்று ஆர்டிஐ மூலமாக கேட்கப்பட்டது. அதற்கு இன்னும் 16 மாதங்களில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்று பதில் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மதுரை டைடல் பார்க் 2027ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று புரிந்து கொள்ளப்படுகிறது.
இது மதுரை இளைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே மதுரையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு வெறும் 4 சதவிகித முதலீடுகள் மட்டுமே வந்தது. மீதமுள்ள முதலீடுகள் சென்னை, காஞ்சிபுரம், கடலூர், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்றது. இதனால் டைடல் பார்க் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.
-
ஆண்டவரையே திகைக்க வைத்த அறிவாலயம்.. கமல்ஹாசன் எடுத்த கடைசி அஸ்திரம்! மநீம கூட்டத்தில் முக்கிய முடிவு -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
இந்த 7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள் தானா? ஒரே ஒருவர் பெயரில் மட்டும் வந்த விருப்பமனுக்கள்! -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
தனித்தொகுதிகள்.. கோட்டையை இழந்த அதிமுக... களம் வென்ற திமுக! 2016 vs 2021 vs 2026 என்ன நடக்கும்? -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
கோவையில் போட்டியா?... முதல்வரின் விருப்பத்தால் விரக்தியில் செந்தில் பாலாஜி! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி! -
கொங்கு வேட்பாளர்களுக்கு இன்று திமுக நேர்காணல்.. கோவையின் 10 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications