மருதமலை மாமணியே முருகய்யா! முருகன் மாநாட்டில் திடீரென பாடிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை ரியாக்‌ஷன்

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை முருகன் மாநாட்டில் பேசிய தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தெலுங்கில் பேசி ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணை வரவேற்றார். தொடர்ந்து மருதமலை மாமணியே முருகய்யா என்ற பாடலை முழுமையாக மேடையில் நயினார் நாகேந்திரன் பாடினார். அப்போது அண்ணாமலை கைதட்டி வரவேற்றார். கூட்டத்தில் பங்கேற்று இருந்தவர்களும் கைகளை தட்டியதால் அரங்கம் அதிர சத்தம் எழுந்தது.

மதுரை பாண்டிக்கோவில் அருகே அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் நேற்று முருக பக்தர்கள் மாநாடு நடந்தது. இதை முன்னிட்டு அறுபடை முருகன் கோவில்களின் மாதிரிகள் கண்காட்சியாக அமைக்கப்பட்டு, வழிபாடுகள் அங்கு நடந்து வந்தன. நாள்தோறும் ஏராளமானவர்கள் தரிசித்தார்கள்.

nainar-nagendran-sings-devotional-song-at-madurai-murugan-conference-annamalai-reacts

மாநாட்டு மேடை திருப்பரங்குன்றம் மலையை பின்னணியாக வைத்தும், அதில் முருகப்பெருமான் படத்துடன், அறுபடை வீடுகளின் கோபுரங்களும் இடம்பெறுவது போன்றும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நேற்று காலை முதலே தொண்டர்கள் மாநாட்டு திடலுக்கு திரண்டு வர தொடங்கினர். பலர் காவி உடைகளுடன், மேள, தாளங்களுடன் ஆடிப்பாடியும் வந்தனர். பலர் கந்த சஷ்டி கவசத்தை பாடியபடி வந்தனர்.

மாலை 3 மணி அளவில் மாநாட்டு மேடையில் கலை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டுக்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வரிசையாக பேசினர். தொடர்ந்து மாநாட்டு மேடையில் இருந்தவர்களும், மாநாட்டுக்கு வந்திருந்தவர்களும் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசம் பாடினர். இது ஒரு கின்னஸ் சாதனையாக அமைந்தது. மாநாடு இரவு 9 மணி அளவில் நிறைவுபெற்றது.

முன்னதாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியதாவது:-

கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன் ஆ..
மருதமலை மாமணியே முருகய்யா..
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா..

என்ற பாடலை முழுமையாக நயினார் நாகேந்திரன் பாடினார். அப்போது மேடையில் இருந்த அண்ணாமலை உற்சாகத்துடன் கைகளை தட்டி வரவேற்றார். அதேபோல, கூட்டத்தில் பங்கேற்று இருந்தவர்களும் கைகளை தட்டியதால் அரங்கம் அதிர சத்தம் எழுந்தது.

முருகா.. முருகா.. என்று சொன்னால் உருகாதோர் யாருமில்லை.. தமிழ்க் கடவுள் முருகன் என்று சொன்னால் அது மிகையல்ல.. முருகா என்ற சொல்லில் வல்லினம், இடையினம், மெல்லினம் இருக்கிறது. நம்முடைய கலாச்சாரம் ஒருமித்த கலாச்சாரம்.. உங்களை எதாவது ஒரு மொழியை தான் படிக்க சொல்கிறோம்.. தமிழ், பக்கத்தில் இருக்கிற தெலுங்கு.. நம்ம கலாச்சாரம், பண்பாடு.. மலையாளம், அருகில் கன்னடம், தெலுங்கு இருகிறது. இந்த கலாச்சாரம் மாறிவிடக்கூடாது என்பதற்காக தான் இந்த முருகன் மாநாடு.. என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+