Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாத்தான்குளம் வழக்கு! ஜெயராஜ் மனைவிக்கு ரூ 1.04 கோடி நிவாரணம்! 9 போலீஸாருக்கு எவ்வளவு அபராதம்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான அபராத தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சாத்தான்குளம் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து, சார்பு ஆய்வாளர் பால்துரை ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

sathankulam madurai

இவர்களில் பால்துரை ஏற்கனவே உடல்நல பிரச்சனையால் இறந்துவிட்டார். மீதியுள்ள 9 பேரும் இந்த வழக்கை சந்தித்து வந்தனர். இந்த நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த 23 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்த வழக்கில் கைதான 9 போலீஸாரும் குற்றவாளிகள் என மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

மேலும் இவர்களுக்கான தண்டனை விவரங்கள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டன. அதில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. சுமார் 650 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில் நீதிபதி முத்துக்குமரன் கூறியிருப்பதாவது: காவல் நிலைய மரணங்கள் இங்கு மட்டுமல்ல, உலகம் எங்கும் நடக்கிறது.

குறிப்பாக அமெரிக்காவின் ஜார்ஜ் பிளாய்டு முதல் சிவகங்கை மாவட்டம் மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கு வரையிலும் காவல் நிலையங்களில் நடக்கும் சித்ரவதை மரணங்களை எடுத்துக்காட்டாக கூறலாம்.

தமிழக காவல் துறையில் பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். பொதுவாக போலீஸ் நிலையங்களில் நடந்த குற்றச் சம்பவங்களுக்கு நேரடி சாட்சிகள் இருக்காது. இந்த வழக்கில் கேமரா காட்சிகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சக பெண் போலீஸார் உள்ளிட்டோர் இந்த 9 பேருக்கும் எதிராக சாட்சியங்கள் அளித்துள்ளனர். போலீஸ் நிலையங்களில் நடக்கும் மரணங்களை சகித்துக் கொள்ள முடியாது என தமிழக அரசு அளித்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அது போல் மத்திய அரசு சார்பிலும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்கள். இந்த சம்பவம் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையிலேயே இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையிலும் தீர்ப்பு இருக்க வேண்டும் என இந்த கோர்ட் முடிவு செய்தது.

இனியும் இவ்வாறு நிகழக் கூடாது என்பதற்கு உதாரணமாகவும், குற்றவாளிகள் இனிமேல் திருந்த வாய்ப்பில்லை என்பதாலும் பொதுமக்கள் எங்களை ஒன்றும் செய்ய முடியாது என அவர்கள் நினைப்பதாலும் 9 பேருக்கும் தூக்கு தண்டனை வழங்கப்படுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் அபராத தொகை மொத்தமாக ரூ 1.04 கோடியை பெனிக்ஸின் தாயார் செல்வராணியிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்பில் ஒவ்வொருவருக்கும் கொடுத்த தண்டனை விவரங்களை பார்க்கலாம்.

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கான அபராதம் 24 லட்சம், இரண்டாவது குற்றவாளி பாலகிருஷ்ணனுக்கு ரூ 16.80 லட்சம், 3ஆவது குற்றவாளி ரகு கணேஷ் ரூ 5.20 லட்சம், 4ஆவது குற்றவாளி முருகனுக்கு அபராதம் ரூ 10.10 லட்சம் விதிக்கப்பட்டுள்ளது.

ஏ5 சாமதுரைக்கு ரூ. 5.60 லட்சம் அபராதம், ஏ6 முத்துராஜுக்கு ரூ 3.20 லட்சம் அபராதம், ஏ7 செல்லதுரைக்கு ரூ 14.40 லட்சம் அபராதம், ஏ8 தாமஸ் பிரான்சிஸுக்கு ரூ 10 லட்சம், ஏ9 வெயில்முத்துவுக்கு ரூ 10.54 லட்சம் என பெனிக்ஸின் தாயாருக்கு ரூ 1 கோடியே 40 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படுகிறது.

அந்த 9 பேரும் கொடுக்க தவறினால், அந்த சொத்துக்களை பறிமுதல் செய்து அந்த பணத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+