மதுரை மக்களே.. சித்திரை திருவிழாவை கொண்டாடிட்டு இரவு 8 மணிக்கு கூட ஓட்டு போடுங்க.. தேர்தல் ஆணையம்
மதுரை: மதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி வாக்கு பதிவு நேரம் இரவு 8 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்குகிறது. இது தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
பள்ளி, கல்லூரி தேர்வு தேதி, திருவிழாக்கள், மதரீதியிலான சடங்குகளை சரிபார்த்த பின்னரே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா கூறியிருந்தார். ஆனால் மதுரையில் ஏப்ரல் 18-ஆம் தேதி தேர்தலை நடத்த அடுத்த நாளே எதிர்ப்பு கிளம்பின.

திருவிழா
மதுரையில் ஆண்டுதோறும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இதை காண லட்சக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவர். இந்த திருவிழா ஏப்ரல் 17, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

வாக்குப் பதிவு தேதி
இந்த நிலையில் மக்கள் திருவிழாவை காண்பரா இல்லை வாக்குச் சாவடிகளுக்கு செல்வரா என்ற கேள்வி எழுந்தது. மேலும் பெருவாரியான மக்கள் வாக்களிக்க வரமாட்டார்கள் என்பதால் வாக்குப் பதிவு தேதியை மாற்றுமாறு கோரிக்கைகள் எழுந்தன.

வாக்குப் பதிவு
இந்த நிலையில் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ தலைமையிலான ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. அதில் பேசிய அவர் தமிழகத்தில் காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கும்.

ஒரு மணி நேரம் நீட்டிப்பு
வழக்கமாக வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு முடிவடையும். ஆனால் மக்களின் சிரமம் கருதி மேலும் ஒரு மணி நேரம் நீட்டித்து மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடத்தப்படும்.

இரவு 8 மணி வரை
குறிப்பிட்ட தொகுதியான மதுரையில் மட்டும் தேர்தலை மாற்றுவது சிரமமான காரியம். எனவே அங்கு வாக்குப் பதிவை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். அதன்படி காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி இரவு 8 மணி வரை நடைபெறும் என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications