தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு- தமிழில் நடத்த கோரி சித்தர்கள் உண்ணாவிரதம்
Recommended Video
மதுரை: தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவை தமிழில் நடத்த வலியுறுத்தி மதுரையில் சித்தர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 5- ந் தேதி நடைபெறுகிறது. இவ்விழாவை தமிழில் திருமறைகள் ஓதி நடத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோ வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மதுரை வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் மந்தையில் இன்று இக்கோரிக்கையை வலியுறுத்தி சித்தர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
இது குறித்து கூறிய சித்தர்கள், தஞ்சை பெரிய கோவிலில் 1000 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. ஆனால் தற்போது சமஸ்கிருதங்களில் குடமுழுக்கு நிகழ்த்தப்படுகின்றன.

இந்நிலையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தியும் தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் குடமுழுக்கு விழா நடத்த வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றனர்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு 12வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் தலைமை வகித்தார். இதில் 200க்கும் மேற்பட்ட சித்தர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications