Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்திய இணைப்பு மொழி தமிழ்; இந்திய அளவில் திராவிடர்களாக ஒன்றுபடுவோம்: இயக்குநர் பா.ரஞ்சித்

Subscribe to Oneindia Tamil

மதுரை: இந்தியாவின் இணைப்பு மொழி தமிழாக இருக்க வேண்டும் என தாம் விரும்புவதாகவும் இந்திய அளவில் திராவிடர்கள் ஒன்றாக இப்போது நிற்பது முக்கியம் என்றும் திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    இந்திய இணைப்பு மொழி தமிழ்; இந்திய அளவில் திராவிடர்களாக ஒன்றுபடுவோம்: இயக்குநர் பா.ரஞ்சித்

    மதுரையில் தலித் எழுத்தாளர்கள் ஒன்று கூடும் தலித் இலக்கிய கூடுகை நிகழ்வு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பா.ரஞ்சித் கூறியதாவது:

    இந்தியாவில் வட இந்தியா, தென்னிந்தியா என பிரிவினை உள்ளது. வட இந்தியர்கள், தென்னிந்தியர்களைவிட உயய்ர்ந்தவர்கள் என கருதுகின்றனர். தாங்கள் மேலானவர்கள் என கருதுகின்றனர். தாங்கள் பேசும் மொழி, பல மாநிலங்களில் பேசுவதால் அப்படி உயர்வாகவும் கருதலாம். ஆனால் நாம் இதனை எப்போதும் ஏற்பது இல்லை. தொடர்ந்து சண்டை போட்டுதான் வருகிறோம். கண்டிப்பாக நாம் அதனை ஏற்பது இல்லை.

    தமிழே இணைப்பு மொழி- திராவிடர்கள்

    தமிழே இணைப்பு மொழி- திராவிடர்கள்

    எனக்கான இணைப்பு மொழி எப்போதும் தமிழாக இருக்க வேண்டும் என எப்பவுமே நான் விரும்புகிறேன். அது தப்புன்னு நான் நினைக்கவில்லை.
    இந்தியாவில் திராவிடர்களுக்கான முக்கியத்துவம் ரொம்ப முக்கியம்னு நினைக்கிறேன். திராவிடர்கள் இந்த சமயத்தில் ஒன்றாக நிற்பது முக்கியம் என நான் நினைக்கிறேன்.

    இளையராஜா விவகாரம்

    இளையராஜா விவகாரம்

    இளையராஜா விவகாரத்தில் எதிர்வினை ஆற்றியவர்களின் மனநிலையை நாம் புரிந்து கொள்ள வேண்டியதாக இருக்கிறது. அவர்கள் விமர்சிக்கும் தன்மையை புரிந்து கொள்ள வேண்டும். அதை நாம் எதிர்க்கிறோம். அதை நாம் கண்டிக்கிறோம். இவ்வாறு பா.ரஞ்சித் கூறியுள்ளார்.

    இந்தி சர்ச்சை

    இந்தி சர்ச்சை

    அண்மையில் கேஜிஎப்-2 படத்தின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த கனன்ட நடிகர் சுதீப், இந்தி இனி தேசிய மொழி இல்லை. பாலிவுட்டிலும் பான் - இந்தியா திரைப்படங்களை தயாரிக்கிறார்கள். தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெற்றியை பெற போராடுகின்றனர். நாங்கள் அனைத்து இடங்களிலும் வெல்கிறோம் என்றார். இதற்கு பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் பதிலளிக்கையில், இந்தி தேசிய மொழி இல்லை எனில் எதற்காக உங்கள் மொழி படங்களை இந்தியில் டப் செய்கிறீர்கள்? இந்தி எப்பொழுதும் நம்முடைய தாய் மொழி- இந்தி தேசிய மொழியாக இருந்துள்ளது.இந்தி எப்போதும் இருக்கும் என கூறியிருந்தார். அஜய்தேவ்கானின் இந்த ட்வீட்டர் பதிவுக்கு தென்னிந்தியாவில் இருந்து மிக கடும் எதிர்ப்பு எழுந்தது. கர்நாடகாவில் பாஜகவினரும் கூட அஜய்தேவ்கானின் இந்த கருத்தை நிராகரித்தனர். இன்னமும் இந்த பஞ்சாயத்து ஓயாத நிலையில் தமிழே இந்தியாவின் இணைப்பு மொழி என கூறியுள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்

    இளையராஜா சர்ச்சை

    இளையராஜா சர்ச்சை

    அதே போல இசையமைப்பாளர் இளையராஜா, நூல் ஒன்றின் முன்னுரையில் பிரதமர் மோடியையும் அண்ணல் அம்பேத்கரையும் ஒப்பிட்டது பெரும் சர்ச்சையானது. இளையராஜாவின் இந்த கருத்தை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடுமையான சொற்களால் விமர்சித்தார். அதற்கு அப்போதே பா.ரஞ்சித் கண்டனம் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+