நெருக்கடி வளையம்.. விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்.. மதுரை போலீசாரின் அதிரடி முடிவு!
மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும், மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்காமல் இருக்க லட்சம் லஞ்சம் பெற்றபோது, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அமலாக்கத்துறை அங்கித் திவாரி, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். காவல்துறையுடன் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை உள்ளே விட மறுத்த அமலாக்கத்துறையினர், பதிலுக்கு துணை ராணுவ படையினரை காவலுக்கு அழைத்தனர்.
இதனால் மாநில அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும், மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், அமலாக்கத்துறையினரை மீறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை சார்பில் இன்று யாரும் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் அமலாக்கத்துறையினருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலக உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் சார்பில், தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடிச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை புகார் அளித்தது. இதுதொடர்பாக அண்மையில் மீண்டும் நினைவூட்டல் செய்யப்படதும் குறிப்பிடத்தக்கது.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications