Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெருக்கடி வளையம்.. விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்.. மதுரை போலீசாரின் அதிரடி முடிவு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும், மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்காமல் இருக்க லட்சம் லஞ்சம் பெற்றபோது, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

TN Police decide to send summon again to Enforcement directorate officials

அமலாக்கத்துறை அங்கித் திவாரி, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். காவல்துறையுடன் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை உள்ளே விட மறுத்த அமலாக்கத்துறையினர், பதிலுக்கு துணை ராணுவ படையினரை காவலுக்கு அழைத்தனர்.

இதனால் மாநில அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும், மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், அமலாக்கத்துறையினரை மீறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை சார்பில் இன்று யாரும் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் அமலாக்கத்துறையினருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலக உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் சார்பில், தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடிச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை புகார் அளித்தது. இதுதொடர்பாக அண்மையில் மீண்டும் நினைவூட்டல் செய்யப்படதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+