நெருக்கடி வளையம்.. விசாரணைக்கு ஆஜராகாத அமலாக்கத்துறை அதிகாரிகள்.. மதுரை போலீசாரின் அதிரடி முடிவு!
மதுரை: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த புகார் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியும், மதுரை அமலாக்கத்துறை அதிகாரிகள் தல்லாகுளம் காவல்நிலையத்தில் ஆஜராகவில்லை. இதனால் மீண்டும் சம்மன் அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் டாக்டர் சுரேஷ் பாபு மீதான வழக்கை விசாரிக்காமல் இருக்க லட்சம் லஞ்சம் பெற்றபோது, கடந்த டிசம்பர் 1ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். அதன்பின் திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டு மதுரை மத்திய சிறைக்கு அவர் மாற்றப்பட்டார்.

அமலாக்கத்துறை அங்கித் திவாரி, லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டதன் தொடர்ச்சியாக அன்றைய தினமே மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் சோதனை நடத்தினர். காவல்துறையுடன் வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை உள்ளே விட மறுத்த அமலாக்கத்துறையினர், பதிலுக்கு துணை ராணுவ படையினரை காவலுக்கு அழைத்தனர்.
இதனால் மாநில அரசின் கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கும், மத்திய அரசின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், அமலாக்கத்துறையினரை மீறி லஞ்ச ஒழிப்புத் துறையினர் அந்த அலுவலகத்தில் சோதனை செய்தனர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலன் அளித்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது மதுரை தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பற்றி அமலாக்கத்துறை அலுவலகத்தில் சோதனை செய்த போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை சார்பில் இன்று யாரும் ஆஜர் ஆகவில்லை. இதையடுத்து, உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசித்து மீண்டும் அமலாக்கத்துறையினருக்கு சம்மன் அனுப்பப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, மதுரை துணை மண்டல அமலாக்கத் துறை அலுவலக உதவி இயக்குநர் பிரிஜிஷ்ட் பெனிவால் சார்பில், தமிழக டிஜிபிக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. மதுரை அமலாக்கத் துறை அலுவலகத்துக்குள் லஞ்ச ஒழிப்புத் துறையினர் எனக் கூறி அத்துமீறி நுழைந்தவர்கள் மீதும், தேவையின்றி ஆவணங்களை திருடிச் சென்றவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறை புகார் அளித்தது. இதுதொடர்பாக அண்மையில் மீண்டும் நினைவூட்டல் செய்யப்படதும் குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications